News August 7, 2025
விஜய்யுடன் கூட்டணி? பிரேமலதா சூசகம்

அரசியலுக்கு வந்தபிறகும் செந்தூரபாண்டியின் (விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக் கொள்கிறார். குறிப்பாக கேப்டனின் போட்டோக்களை தவெகவினர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான், தற்போதைக்கு விஜயகாந்த் போட்டோக்களை பயன்படுத்த வேண்டாம்; கூட்டணிக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் என நேற்று பிரேமலதா கூறினார். இது, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான மறைமுகமாக சமிக்ஞை என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 7, 2025
ஆரஞ்ச் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை: IMD

தமிழகத்தில் சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
News August 7, 2025
தீர்க்க சுமங்கலி அருள் பெற பெண்கள் என்ன செய்யலாம்?

வரலட்சுமி விரதத்தன்று பெண்கள் எவ்வாறு வழிபடலாம் என்பதை பார்ப்போம். பூஜையறையில் கலசம் வைத்து அதற்கு நெய் தீபம் ஏற்றியும், அன்னைக்கு தாமரை மலர், துளசி இலை படைத்தும் வழிபடலாம். அதைப்போன்று கலசத்தை சுற்றி 8 நாணயங்களை வைத்து பூஜை செய்து அதனை பீரோவில் வைக்கலாம். மேலும், மஞ்சள் கயிறை பூஜை செய்த பின்பு பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தால் தீர்க்க சுமங்கலி அருள் பெற முடியுமாம்.
News August 7, 2025
WOW! ஈஃபில் டவர் வளர்கிறதா?

பாரீஸின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் வளர்கிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம்! கோடைக் காலத்தில் அதன் உயரம் 15 செ.மீ., வரை அதிகரிக்கிறது. வெப்பநிலை உயரும்போது பொருள்கள் விரிவடையும் என்ற இயற்பியல் விதியின் அடிப்படையிலேயே கோடையில் அதன் இரும்பு கட்டுமானம் லேசாக விரிவடைகிறது. இவ்வாறு விரிந்து சுருங்குவதற்கு ஏற்ப, தண்டவாளத்தில் உள்ளதுபோல், அவற்றின் இணைப்புகள் போதிய இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளன.