News October 30, 2025
பள்ளி மாணவர்களின் மனுவை ஏற்ற அலகாபாத் HC

லக்னோவில் உள்ள ICSE பள்ளி ஒன்றில் பயிலும் 11 & 14 வயதுடைய 2 மாணவர்களுக்கு, போதிய வருகைப் பதிவு, மார்க் இல்லையென்பதால் அடுத்த வகுப்பு செல்வதற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பள்ளி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் HC ஏற்றது. RTE சட்டம் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என கூறிய HC, 11 வயது மாணவரை 6-ம் வகுப்பிற்கு செல்லவும், 14 வயது மாணவருக்கு மறுதேர்வு நடத்தவும் உத்தரவிட்டது
Similar News
News October 30, 2025
விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பசும்பொன்னில் அமைத்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று CM ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
News October 30, 2025
வீட்டிற்குள் கோலம் போடலாமா?

வீட்டின் வாசலுக்கு முன்னால் கோலம் போடுவது வழக்கம். லட்சுமி தேவியின் நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவேற்பதை முதன்மையான நோக்கமாக கொண்டு, கோலத்தில் ஓம், ஸ்வஸ்திக், லட்சுமி தேவியின் பாதங்கள் போன்றவை பயன்படுத்துவார்கள். வீட்டினுள் கோலம் போடுவதால், அவற்றை மிதிக்க வாய்ப்புள்ளது. இது மங்களகரமான ஆற்றலை மிதிப்பது போன்றது என்பதால், வீட்டினுள் கோலம் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.
News October 30, 2025
2 மாதங்கள் ஓய்வில் ஷ்ரேயஸ்?

ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI போட்டியின்போது ஷ்ரேயஸுக்கு விலா எலும்பில் அடிபட்டது. இதனையடுத்து ICU-வில் சிகிச்சை பெற்ற அவர், ஹாஸ்பிடலிலேயே உள்ளார். அவரது உடலில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக BCCI தெரிவித்தது. இந்நிலையில், 2 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 மாதங்களும் ஷ்ரேயஸ் முழு ஓய்வில் இருக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. Get well soon..


