News October 27, 2024

தவெக ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்..! (3/4)

image

*தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. *வர்ணாசிரம வழக்கங்களுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். *தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என்ற நிலை உறுதி செய்யப்படும். *ஆண், பெண், 3ஆம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சமமாக நடத்தப்படுவர். *தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை. *லஞ்ச, ஊழலற்ற நிர்வாகம் உறுதி.

Similar News

News January 19, 2026

பாமக எனக்கே சொந்தம்: வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்

image

டெல்லி HC வழிகாட்டுதலின் படி, பாமகவுக்கு உரிமை கோரி சென்னை HC-ல், ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். கூட்டணி தொடர்பாக வேறும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் அது செல்லாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடி, சின்னமும் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 19, 2026

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பாஜக: தமிழிசை

image

ஜல்​லிக்​கட்டை ‘காட்​டுமி​ராண்​டி விளையாட்டு’ என்ற காங்​கிரஸுடன் திமுக கூட்​டணி வைத்​துள்​ளது என தமிழிசை விமர்சித்துள்ளார். பாஜக அரசு​தான் தடையை நீக்கி ஜல்​லிக்​கட்டை மீட்​டெடுத்ததாக கூறிய அவர், ஆனால் அதை தற்​போது திமுக​வின் விழா​வாக மாற்​றி​விட்​டனர் எனவும் கூறியுள்ளார். மேலும்,
ஜல்​லிக்​கட்டு வீரர்​களுக்கு அரசு வேலை வழங்​கு​வது வரவேற்​கத்​தக்​கது என்றும் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

விஜய்யிடம் CBI அடுக்கிய கேள்விகள்.. கசிந்தது தகவல்!

image

கரூர் வழக்கில் விஜய்யை விசாரிக்கும் CBI, அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் அரசு முறையான நடைமுறையை பின்பற்றாததே காரணம் என தவெக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதன்பிறகு விஜய்யிடம் கேள்விகளை அடுக்கிய CBI, கூட்டத்தில் இருந்து தண்ணீர் பாட்டிலை வீசியபோது நெரிசலை பார்க்கவில்லையா? தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது ஏன்? கீழே நிலைமை மோசமானது தெரியவில்லையா என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

error: Content is protected !!