News September 30, 2025

அனைத்து உண்மைகளும் வெளிவரும்: விஜய்

image

கரூர் விவகாரத்தில் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை என விஜய் விளக்கமளித்துள்ளார். மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவர், விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் எனக் கூறியுள்ளார். கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து மக்கள் பேசுவது, கடவுளே இறங்கி வந்து சாட்சி சொல்வது போல இருந்ததாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News September 30, 2025

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: IMD

image

அந்தமான் கடற்பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல சுழற்சியால், வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.2-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அக். 3 வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2025

Railway Station-க்கு இத எடுத்துட்டு போனா உயிருக்கே ஆபத்து

image

தண்டவாளத்துக்கு அருகில் உலோகத்தால் உருவாக்கப்பட்ட குடையை எடுத்துச்சென்றால் ஷாக் அடிக்கும் அபாயம் இருக்கிறதாம். ரயில் நிலையத்தில், மேல் செல்லும் கம்பிகளிலிருந்து ரயிலின் எஞ்சினுக்கு மின்சாரம் பாய்கிறது. இது தண்டவாளம் வழியாக நிலத்திற்கும் செல்லும். அப்போது தண்டவாளத்தின் அருகே நீங்கள் உலோக பொருளை வைத்திருந்தால் அதன்மூலம் உங்களுக்கு ஷாக் அடிக்கலாம். உயிர்காக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News September 30, 2025

விஜய் ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை: திருமா

image

விஜய்யின் வீடியோ எதிர்வினைகளை உருவாக்கும் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். 3 நாள்கள் மவுனம் காத்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்ட நெரிசல் விவகாரத்தில் திமுக அரசை தொடர்புபடுத்திப் பேசுவது சரியல்ல என்ற அவர், உண்மையை பேசினால் தான் மக்கள் நம்பிக்கையை பெற முடியும் என்றார். இவரின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

error: Content is protected !!