News August 6, 2025

அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்த வேண்டும்: அண்ணாமலை

image

திருப்பூரில் SSI படுகொலை சம்பவமானது நமது சமூகம் அழிவுப்பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ள அரசாலும், அதிக போதை உள்ள மதுவாலும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிய அண்ணாமலை, துணை ஆய்வாளர் மற்றும் அதற்கு கீழ் பொறுப்பு வகிக்கும் அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 7, 2025

உங்களிடம் ₹2,000 நோட்டுகள் உள்ளதா? இதை செய்யுங்க

image

2023 அக்டோபர் முதல் வங்கிகளில் ₹2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் கொடுத்து மாற்ற முடியும். அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உள்ளிட்டவற்றுடன் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் சென்றால் பணம் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படும். தபால் நிலையம் மூலமும் ரிசர்வ் வங்கிக்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT.

News August 7, 2025

இன்பநிதி- மணிரத்னம் காம்போவில் புதிய படம்?

image

DCM உதயநிதியின் மகன் இன்பநிதி விரைவில் கோலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குவதற்காக பல முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் போன்றவர்களின் பெயர் அடிபட்ட நிலையில், இந்த லிஸ்ட்டில் மணிரத்னம் பெயரும் இணைந்துள்ளது. லண்டனில் படிப்பை முடித்து திரும்பும் இன்பநிதி, உடனடியாக ஷூட்டிங்கில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

News August 7, 2025

கணவருக்கு ‘ராக்கி’ கட்டும் பெண்கள்!

image

இந்தியாவில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல வித்தியாச கலாச்சார நடைமுறைகளில் இதுவும் ஒன்று. ராக்கி என்றால் சகோதரன்-சகோதரி பாசம் நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால், இன்றளவும் ம.பி.யின் சிண்ட்வாரா மாவட்டத்தில் கோண்டி சமூக பெண்கள் தங்கள் கணவர்களுக்கே ராக்கி கட்டுகிறார்கள். தங்களை பாதுகாப்பவரை கெளரவிக்கும் விதமாக அப்பகுதி மக்களின் இந்த வழக்கம் உள்ளது. வியப்பாக உள்ளது அல்லவா!

error: Content is protected !!