News August 6, 2025

அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்த வேண்டும்: அண்ணாமலை

image

திருப்பூரில் SSI படுகொலை சம்பவமானது நமது சமூகம் அழிவுப்பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ள அரசாலும், அதிக போதை உள்ள மதுவாலும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறிய அண்ணாமலை, துணை ஆய்வாளர் மற்றும் அதற்கு கீழ் பொறுப்பு வகிக்கும் அனைத்து போலீசாரும் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 6, 2026

லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

image

2026-27 ஆம் நிதியாண்டிற்கான முதல் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் தொடங்கியுள்ளது. இதில், RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ரெப்போ ரேட் குறைப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நாளை மறுநாள் அவர் அறிவிக்க உள்ளார். இதில், கடந்த ஆண்டைப்போல் இந்தாண்டும் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால், வீடு, வாகன கடன் பெற்றவர்களுக்கு EMI குறையும்.

News April 6, 2026

கரூர் போல் சென்னையிலும்.. ஆதவ் பகீர் குற்றச்சாட்டு

image

<<19578094>>விஜய்யின் பிரசாரம் ரத்து<<>> செய்யப்பட்டதற்கு சென்னை கமிஷனர் அருணே காரணம் என ஆதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.நகரில் மாலை 2-6 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அதனை ரத்து செய்து மாலை 2-3 மணி வரை மட்டுமே அனுமதி தந்தார்கள் என அவர் தெரிவித்தார். ஸ்டாலினின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படும் கமிஷனர் அருண், கரூர் மாதிரியான பிரச்னையை சென்னையில் உருவாக்க முயற்சிக்கிறார் எனவும் கூறினார்.

News April 6, 2026

ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் கொடுத்த ப்ளான்

image

ஈரானுக்கும் USA-வுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக PAK ராணுவ தளபதி முனீர், USA துணை அதிபர் JD வான்ஸ் & ஈரான் அமைச்சர் அராக்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, போரை நிறுத்துவதற்கான திட்டம் ஒன்றை இருநாடுகளுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளதாம். இதில் உடன்பாடு எட்டப்பட்டால் 1 வாரத்திற்குள் போர் நின்று, ஹார்முஸ் நீரிணை திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!