News April 7, 2024

அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்

image

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கே.பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க ரூ.4.5 கோடியை நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் எடுத்துச் சென்றதை சுட்டிக்காட்டி, அவர் இந்த மனுவை வழங்கியுள்ளார்.

Similar News

News January 17, 2026

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: CM ஸ்டாலின்

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட CM ஸ்டாலின், 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். *ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி, முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அரசு வேலை. *அலங்காநல்லூரில் ₹2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் & உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

டெல்லி செல்லும்முன் பற்ற வைத்த மாணிக்கம் தாகூர்

image

டெல்லி செல்வதற்கு முன் மாணிக்கம் தாகூர் போட்ட பதிவு தான், தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக். டெல்லிக்கு செல்வது எனக்காக அல்ல!, என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், காங்., உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்துவிடக் கூடாது என்பதை தலைவர்களிடம் வலியுறுத்தவும் டெல்லி சொல்லவிருக்கிறேன் என பதிவிட்டு புதிய நெருப்பை பற்றவைத்துள்ளார்.

News January 17, 2026

மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை: அன்புமணி

image

TN-ல் பொங்கல், போகி நாள்களில், டாஸ்மாக் வாயிலாக <<18876139>>₹518 கோடிக்கு<<>> மது விற்பனையானது. இதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, மக்கள் நலனுக்காக துரும்பை கூட அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும் குடிகாரர்களாக்கி, மது வணிகத்தை பெருக்குவதில் தான் சாதனை படைத்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது சாதனை அல்ல, வேதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!