News April 7, 2024
அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கே.பாலகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க ரூ.4.5 கோடியை நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் எடுத்துச் சென்றதை சுட்டிக்காட்டி, அவர் இந்த மனுவை வழங்கியுள்ளார்.
Similar News
News March 25, 2026
பள்ளியில் மாணவி மரணம்.. தமிழகத்தில் ஷாக்

தென்காசி, புளியங்குடியில் பள்ளி வளாகத்துக்குள் கார் மோதியதில் LKG மாணவி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் 17 மணிநேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைகள் படிக்கும் பள்ளி வளாகத்துக்குள் கார் வேகமாக வந்தது எப்படி? ஓட்டிவந்தது யார் என்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
News March 25, 2026
பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது: ECI

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், சோதனையின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ செலவுக்கு ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு போனால் சிகிச்சை பெறுபவரின் விவரங்களை செல்போனில் காண்பித்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 25, 2026
தொகுதிப்பங்கீடு சர்ச்சைக்கு ஸ்டாலின் பதிலடி

CPM, CPI உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை கிள்ளிக்கொடுத்த திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேதிமுகவுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்ததாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களை பரப்பிட சிலர் முயற்சி செய்கிறார்கள்; திசைதிருப்ப நினைக்கும் இதுபோன்ற வதந்திகளை திமுகவினர் கொண்டுகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.


