News October 7, 2025
ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

பிஹார் தேர்தல் முடித்த பிறகு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ராஜ்யசபா தலைவராக அமர உள்ள துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன், மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சுமூக உறவை ஏற்படுத்த விரும்புகிறார். அதன்படி இன்று மாலை அவரது அலுவலகத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
Similar News
News October 7, 2025
உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்

இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் ₹15 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் நகை ₹1 லட்சம் ரூபாய் என்கிற நிலையை எட்டும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் 2025 நிலவரப்படி எந்தெந்த நாடுகள் எவ்வளவு தங்கத்தை இருப்பு வைத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 7, 2025
ராமதாஸை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்

சென்னை தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் நயினார் நாகேந்திரன். அவருடன் பாஜக தேசிய துணை தலைவர் பைஜெயந்த் ஜெய் பாண்டா, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். முன்னதாக, CM ஸ்டாலின், சீமான், EPS ஆகியோரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்னும் 2 நாள்களில் ராமதாஸ் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
News October 7, 2025
விஜயகாந்த் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால், பிரேமலதாவின் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மூத்த சகோதரி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கமான நிகழ்வு நடந்தது, தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.