News June 26, 2024
அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்: அதிமுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் போல் சபாநாயகர் செயல்படுவதாகவும், சட்டப்பேரவையில் விவாதம் நடத்தவே திமுக பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தால்தான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும் என்றார்.
Similar News
News November 18, 2025
பிஹார் CM பதவியேற்பு விழா: EPS-க்கு அழைப்பு

பிஹார் CM பதவியேற்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் 20-ம் தேதி 10-வது முறையாக நிதிஷ் குமார் CM ஆக பதவியேற்க உள்ளார். இதில், PM மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
News November 18, 2025
பிஹார் CM பதவியேற்பு விழா: EPS-க்கு அழைப்பு

பிஹார் CM பதவியேற்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் 20-ம் தேதி 10-வது முறையாக நிதிஷ் குமார் CM ஆக பதவியேற்க உள்ளார். இதில், PM மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
News November 18, 2025
திமுகவுடன் கூட்டணி ஏன்? மனம் திறந்த MP கமல்ஹாசன்

TV ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து முதல்முறையாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக விமர்சித்ததாகவும், தற்போது மாநிலத்தின் ரிமோட் வேறொருவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் விளக்கம் அளித்தார்.


