News June 26, 2024
அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்: அதிமுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் போல் சபாநாயகர் செயல்படுவதாகவும், சட்டப்பேரவையில் விவாதம் நடத்தவே திமுக பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தால்தான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும் என்றார்.
Similar News
News December 5, 2025
புடினுக்கான விருந்தில் சசி தரூர் IN.. ராகுல் OUT!

ஜனாதிபதி இல்லத்தில் இன்று இரவு ரஷ்ய அதிபருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க ராகுல் காந்தி மற்றும் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாம். மாறாக, காங்., MP சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்கும் மரபு, பாஜக ஆட்சியில் மீறப்படுவதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.
News December 5, 2025
கோலி vs ரோஹித்: NO.1 இடத்தை பிடிக்கப்போவது யார்?

தற்போது ODI தரவரிசையில் ரோஹித் முதலிடத்திலும் (783 புள்ளிகள்), கோலி 4-ம் இடத்திலும் (751 புள்ளிகள்) உள்ளனர். இந்நிலையில், நாளை நடக்கும் IND vs SA போட்டியில், ரோஹித் அடிக்கும் ரன்களை விட, கூடுதலாக 50+ ரன்கள் கோலி அடித்தால், அவர் தரவரிசையில் NO.1 இடத்தை பிடிப்பார். இருவரும் ஒரே ரன்களை அடித்தால், ரோஹித் முதலிடத்தையும், கோலி 2-ம் இடத்தையும் பிடிப்பார். நாளை எது நடக்க வேண்டும் என நினைக்கிறீங்க?
News December 5, 2025
திமுகவில் வசைபாடினார்கள்: நாஞ்சில் சம்பத்

6 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் தான் இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தவெகவில் இணைந்தபோது, ‘நான் உங்கள் ஃபேன்’ என விஜய் சொன்னதும் மெய்சிலிர்த்து போனதாக நெகிழ்ந்துள்ளார். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் தனக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அறிவுத் திருவிழாவில் தன்னை நிராகரித்ததாகவும், திமுகவில் தன்னை வசைபாடியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


