News January 23, 2025
பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளும் ஃபெயில்: ராகுல்

மோடி ஆட்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் நலிவடைந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்கள் சிந்தும் வியர்வையால்தான் இந்திய பொருளாதாரமே ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் அதற்கான எந்த பலனையும் அவர்கள் அடையவில்லை என்றும் குறை கூறியுள்ளார். மோடி நெருக்கமான தொழில் அதிபர்கள் மட்டுமே பாஜக ஆட்சியில் பலன் அடைந்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News January 6, 2026
போப் மறைவால் ரோம் படைத்த சாதனை!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஆண்டில் சுமார் 3.35 கோடி சுற்றுலா பயணிகள் ரோமுக்கு வந்துள்ளதாக இத்தாலிய அரசு தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு மற்றும் புதிய போப் லியோவின் பதவியேற்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் அமைதி, மன்னிப்புக்கான காலமாக 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புனித ஆண்டில் அங்குள்ள புனித வாசல்களில் நுழையவும் அதிக பயணிகள் ரோமுக்கு சென்றுள்ளனர்.
News January 6, 2026
தீபத்தூண் வழக்கில் TN அரசு மேல்முறையீடு செய்யும்: ரகுபதி

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் TN அரசு SC-ல் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டு காலத்தில் அது தீபத்தூண் என்பதற்கோ, அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கோ ஆதாரம் இல்லை என்றவர், ஒருவரின் கோரிக்கைக்காக இல்லாத வழக்கத்தை நடைமுறைபடுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் தீபமேற்ற கோர்ட் அனுமதித்தது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்
News January 6, 2026
கரூர் வழக்கில் விஜய்க்கு சம்மன் அனுப்பியது CBI

கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கின் CBI விசாரணை வளையத்திற்குள் விஜய் சிக்கியுள்ளார். கடந்த வாரம் டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், வரும் 12-ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் தவெக தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


