News January 23, 2025

பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளும் ஃபெயில்: ராகுல்

image

மோடி ஆட்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் நலிவடைந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்கள் சிந்தும் வியர்வையால்தான் இந்திய பொருளாதாரமே ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் அதற்கான எந்த பலனையும் அவர்கள் அடையவில்லை என்றும் குறை கூறியுள்ளார். மோடி நெருக்கமான தொழில் அதிபர்கள் மட்டுமே பாஜக ஆட்சியில் பலன் அடைந்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

Similar News

News December 26, 2025

மல்லசமுத்திரம் அருகே விபத்து! VIDEO

image

சின்னதம்பிபாளையம் அருகே நேற்று (டிச.25) டெம்போ ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் இல்பான் லேசான காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். டெம்போவில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பினர். இது குறித்து மல்லசமுத்திரம் எஸ்ஐ கவி பிரியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News December 26, 2025

REWIND: சுனாமி பேரலை 8,000 தமிழர்களை கொன்ற நாள்!

image

ஆழிப்பேரலை(Tsunami) கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்த துயரத்தின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2004-ம் ஆண்டு இதே நாளில் கடற்கரை ஓரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்கள் உள்பட 7,993 பேர் உயிரிழந்தனர். தாய், தந்தை, மனைவி, அக்கா, தம்பி, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் இன்னும் அந்த துயரிலிருந்து மீளாமல் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

News December 26, 2025

சகல சௌபாக்கியம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

image

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள மகாலட்சுமிக்கு, அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். ➤பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட, செல்வம் பெருகும் ➤சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழால் அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும் ➤மாலையில், சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும். SHARE IT.

error: Content is protected !!