News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
பொங்கல் பரிசுத்தொகை.. வந்தது இனிப்பான செய்தி

2021 தேர்தலின்போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, பொங்கல் பரிசாக ₹2,500 அளித்தது. இதை முறியடிக்கும் வகையில் ₹3,000 வழங்க திமுக அரசு திட்டமிட்டு, அதில் உறுதியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகை பற்றி புத்தாண்டு தினத்தன்று CM ஸ்டாலின் அறிவிப்பார் எனவும், தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News December 25, 2025
ரஜினி படத்தில் பாலிவுட் பாட்ஷா!

‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக சமீபத்தில் தகவல் பரவிய நிலையில், தற்போது அது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, தான் உள்பட பல சீனியர் நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். அதில் ஷாருக்கான், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 25, 2025
BREAKING: முதற்கட்டமாக 1,000.. அமைச்சர் அறிவித்தார்

1,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால், 7 நாள்களாக நடைபெற்று வந்த MRB செவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய <<18651286>>செவிலியர்கள் ஒரு வாரமாக கைது,<<>> தொல்லை என சித்திரவதையை அனுபவித்ததாகவும், மொத்தமுள்ள 8,322 ஒப்பந்த செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யும் வரை தங்களது முழக்கம் தொடரும் என்றும் கூறினர்.


