News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
ராணிப்பேட்டை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
ரயில்வேயில் 1,785 பணியிடங்கள்; APPLY NOW!

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஓராண்டு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு iroams.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் டிச.17-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள். SHARE.
News December 4, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹96,160-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,020-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால், நம்மூரிலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக விலை குறைந்துள்ளது.


