News May 15, 2024

அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

image

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

BLO-வை வீட்டில் அடையுங்கள்: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

image

SIR படிவங்களை எடுத்துவரும் BLO-க்களை வீட்டில் கட்டிவையுங்கள் என ஜார்க்கண்ட் காங்., அமைச்சர் இர்ஃபான் அன்சாரி பேசியுள்ளார். வாக்களர் பெயர்களை நீக்குவதற்காகவே அவர்கள் வீடுதேடி வருவதாக கூறிய அவர், SIR-க்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், BLO-க்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

News November 25, 2025

டிகிரி மட்டும் போதும்; வங்கியில் வேலை: APPLY NOW

image

பேங்க் ஆப் பரோடாவில் Apprentice பணிக்கு 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. வயது வரம்பு: 20-28 வயது வரை. ஊதியம்: மாதம் ₹15,000 வரை Stipend. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1. விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக மட்டுமே. வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News November 25, 2025

இந்த நாள்களில் மிக மிக கவனம் மக்களே!

image

காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு நவ.28-ல் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.29-ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட், டிச.1-ல் திருவள்ளூருக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.26, 27 ஆகிய 2 நாள்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

error: Content is protected !!