News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
இரு சித்தாந்தத்திற்கு இடையேதான் போட்டி: சீமான்

2026 தேர்தலில் நாதக தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்வி என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாதகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், திராவிட சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியிலுக்கும் இடையேதான் தேர்தலில் போட்டி என கூறியுள்ளார். அரசு கொடுக்கும் இலவசங்கள் மக்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும், தற்சார்பே தங்கள் பொருளாதார கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 27, 2025
என்றும் தளபதி ரசிகையே: மாளவிகா மோகனன்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைப் போலவே தானும் ஒரு ரசிகையாக விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். விஜய் சாருடன் பணியாற்றியது மிகப்பெரிய பெருமை. அவரை ஒரு நண்பர் என அழைப்பது அதைவிடப் பெரிய பெருமை எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்துடன் பொங்கலுக்கு ரிலீசாகும் பிரபாஸின் ’ராஜாசாப்’ படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
News December 27, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றுடன் இந்த வார வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1.04 லட்சமாக உள்ளது. இது கடந்த வாரத்தைவிட ₹4,800 அதிகமாகும். கடந்த சனிக்கிழமை 1 சவரன் ₹99,200-க்கு விற்பனையாகி இருந்தது. இதுஒருபுறம் இருக்க, வெள்ளி விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு ₹48,000 அதிகரித்து, ₹2.74 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை விலை எப்படி இருக்குமோ?


