News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

EX மத்திய அமைச்சர் குசுமா கிருஷ்ணமூர்த்தி(85) டெல்லியில் மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஒருங்கிணைந்த ஆந்திராவின் அமலாபுரம் தொகுதியில் 3 முறை எம்பியாக தேர்வானவர். 1990-ம் ஆண்டு மத்திய பெட்ரோலியம் மற்றும் ரசாயன துறையின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலாளர், SC & ST தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். #RIP
News December 13, 2025
ஒரே குடையில் கொண்டுவர PM மோடி திட்டம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு ‘Viksit bharat shiksha adhikshak’என்ற ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் UGC, AICTE, NCTE, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஆணையங்களின் செயல்பாடுகள் இனி ஒரே ஆணையமாக செயல்பட உள்ளது. இதற்கான மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News December 13, 2025
திமுகவே வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருகிறது: அன்புமணி

<<18547716>>மகளிர் முன்னேற்றம்<<>> பற்றி CM ஸ்டாலின் பேசியிருந்த நிலையில், மதுக்கடைகளை திறந்து குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டு, மகளிர் முன்னேற்றம் எனக்கூறுவது வெட்கக்கேடு என அன்புமணி விமர்சித்துள்ளார். மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டமே ஒரு வாக்குத்திருட்டு நடவடிக்கை தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிமுக, பாஜகவும் தேர்தலுக்காகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக கூறியிருந்தன.


