News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
உலகின் உயரமான கட்டடங்கள் PHOTOS

உலகின் மிக உயரமான கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டடங்கள், நகரங்களின் அடையாளமாகவும் உள்ளன. அப்படி உலகப் புகழ்பெற்ற டாப்-10 உயரமான கட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 19, 2025
MGR முகமூடியை விஜய் போடுகிறார்: ஜெயக்குமார்

விஜய்க்கு என்று ஒரு தனித்தன்மை கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். MGR முகமூடி போட்டுக்கொண்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும் என்ற நிலையில் விஜய்க்கு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், MGR, ஜெயலலிதா, அண்ணா என எந்த முகமூடி போட்டு வந்தாலும், இரட்டை இலைக்கு வாக்கு செலுத்திய கைகள் வேறு எந்த கட்சிக்கு வோட்டு போடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 19, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 19, மார்கழி 4 ▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


