News October 23, 2024
ALERT: புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் SEBI

பரஸ்பர நிதி நிறுவனங்களின் நடைமுறை வெளிப்படைத்தன்மையை SEBI புதிய விதிகளை நவ. 1 முதல் அமல்படுத்தவுள்ளது. அதன்படி, இனிமேல், எந்தவொரு AMC நிறுவனத்தின் முக்கிய பணியாளர்கள், அந்தந்த நிறுவனங்களின் MF யூனிட்களில் ஒரு காலாண்டில் ₹15 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், 2 நாட்களுக்குள் இணக்க அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். வாங்கிய யூனிட்களை ஒரு மாதத்திற்குள் (காரணம் தெரிவிக்காமல்) விற்கக்கூடாது.
Similar News
News January 16, 2026
சற்றுமுன்: செங்கோட்டையன் தரப்பு அதிர்ச்சி

தவெகவில் விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பொது மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால், சற்றுமுன் <<18871253>>விஜய் வெளியிட்ட பிரசார பணிக்குழுவில்<<>> செங்கோட்டையன் பெயர் ஆதவ் அர்ஜுனாவின் பெயருக்கு அடுத்ததாக இடம் பெற்றது சர்ச்சையாகியுள்ளது. பிரசார கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவரை மட்டுப்படுத்துகிறாரா விஜய் என ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்து?
News January 16, 2026
திமுக அரசின் கொள்ளைத் திட்டம்: அன்புமணி

1553 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ₹9.50 வரை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். எனவே, சந்தை சராசரி விலையை கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே மின்சாரத்தையும் வாங்க ஆணையிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News January 16, 2026
சனாதன தர்மத்தில் வேரூன்றி நிற்கும் திருவள்ளுவர்: R.N.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, கவர்னர் RN ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவரது X-ல், வள்ளுவரின் ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தார்மீக மற்றும் ஆன்மிக உணர்வுகளை வடிவமைத்துள்ளது. பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்குறள், சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம் கடந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.


