News October 23, 2024

ALERT: புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் SEBI

image

பரஸ்பர நிதி நிறுவனங்களின் நடைமுறை வெளிப்படைத்தன்மையை SEBI புதிய விதிகளை நவ. 1 முதல் அமல்படுத்தவுள்ளது. அதன்படி, இனிமேல், எந்தவொரு AMC நிறுவனத்தின் முக்கிய பணியாளர்கள், அந்தந்த நிறுவனங்களின் MF யூனிட்களில் ஒரு காலாண்டில் ₹15 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், 2 நாட்களுக்குள் இணக்க அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். வாங்கிய யூனிட்களை ஒரு மாதத்திற்குள் (காரணம் தெரிவிக்காமல்) விற்கக்கூடாது.

Similar News

News November 25, 2025

வேலை கிடைக்கலையா? ₹15 லட்சம் தரும் அரசு திட்டம்!

image

இளைஞர்களே படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்களா? 25% மானியத்தில் TN அரசு கடன் வழங்குகிறது. UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில் தொடங்க ₹15 லட்சம் கடன் கிடைக்கும். இதனை பெற, குறைந்தது 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 45 வயதுக்குட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமலும் இருக்கவேண்டும். <>www.msmeonline.tn.gov.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE.

News November 25, 2025

உங்களுக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்புங்கள்: PM மோடி

image

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் ராமரை தட்டி எழுப்ப வேண்டும் என PM மோடி அறிவுறுத்தியுள்ளார். அயோத்தியில் <<18383307>>கொடி ஏற்றி<<>>ய பின் பேசிய அவர், அதீத பக்தி உணர்வு மூலமாகவே ராமர் நம்மை தொடர்புகொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், நாம் ராமரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவரை புரிந்து கொண்டு, அவரை உள்வாங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றும் PM வலியுறுத்தியுள்ளார்.

News November 25, 2025

முன்னாள் MP, MLA-க்களுடன் ஆலோசனையில் KAS

image

கொங்கு மண்டலத்தில் உள்ள முன்னாள் MP, MLA-க்கள் உடன் கடந்த இரண்டு நாள்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாள்களில் தவெகவில் இணைவார் என்று பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இபிஎஸ், வேலுமணி மீது அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகிகள் உடன் அவர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். பெரும் படையுடன் KAS தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!