News October 24, 2025
ALERT: இந்த மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழை பெய்யும்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
வாரன் பஃபெட்டின் பொன்மொழிகள்

*பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள். *தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரை வேலை செய்வீர்கள். *நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவான நபர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள். *ஒருபோதும் ஒற்றை வருமானத்தை சார்ந்திருக்காதீர்கள். இரண்டாவது மூலத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்.
News October 24, 2025
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், கடந்த ஜூன் மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை HC இருவருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
சிந்திக்க தூண்டும் PHOTOS

சில படங்கள் நம் மனதில் தங்கி, இந்த உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றுகின்றன. இவை யதார்த்தங்கள் மற்றும் ஞானத்தை பிரதிபலிக்கின்றன. ஒருசில விஷயங்களை, வித்தியாசமாகப் பார்ப்பதன் மூலம் தெளிவு கிடைக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. சிந்திக்க தூண்டும் சில போட்டோக்களை, மேலோ பகிர்ந்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா நண்பர்களுக்கு share பண்ணுங்க.