News September 4, 2025
அலர்ட்: வெளுத்து வாங்கபோகும் கனமழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக, பரவலாக மழை பெய்து வரும் நிலையில், IMD மீண்டும் கனமழை அலர்ட் விடுத்துள்ளது. வரும் 8-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அலர்ட் கொடுத்துள்ளது.
Similar News
News September 4, 2025
BREAKING: இலங்கை தமிழர்கள் இனி சட்டப்பூர்வமாக தங்கலாம்

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்து அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்கலாம். அண்மையில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின்(INA) கீழ் உள்ள தண்டனை விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. TN-ல் சுமார் 80,000 பேர் அகதிகளாக உள்ளனர்.
News September 4, 2025
தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களுக்கு ஆபத்து!

Carbon Emission, புவி வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில், சென்னை உள்பட 7 மாவட்டங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. அண்ணா பல்கலை.,யின் காலநிலை, பேரிடர் மேலாண்மை மையத்தின் Prof.ராமச்சந்திரன் கூறுகையில், 1991 – 2023 வரை ஏற்பட்ட புயல், காலநிலை புள்ளி விவரங்களின் படி, 2100-ம் ஆண்டில் கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் 25 CM கடல் மட்ட உயர்வு இருக்குமாம். உஷார்!
News September 4, 2025
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. பயத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவாகியுள்ளது. நிலப்பரப்புக்கு கீழ் 135 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். இன்றைய நிலநடுக்கத்தால் புதிய உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.