News August 8, 2024
ALERT: இங்கெல்லாம் கனமழை அடித்து வெளுக்கும்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் 11ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
Similar News
News December 5, 2025
மதவாத அரசியலை மக்கள் முறியடிப்பர்: கனிமொழி

மதவாத அரசியலை தமிழகத்தில் செய்துவிட RSS-BJP தொடர்ந்து முயற்சித்து வருவதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த முயற்சியை, தமிழக அரசுடன் இணைந்து மதுரை மக்களும் முறியடிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏற்க மறுக்கும் ஆகம விதிகள், கார்த்திகை திருநாள் முடிந்த பின்னும் தீபம் ஏற்ற அனுமதிப்பது தான் வியப்பாகவுள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 5, 2025
25 ஆண்டுகால மோடி, புடின் நட்பு (RARE IMAGE)

PM மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் அரசியலையும் கடந்து மிக நெருங்கிய நண்பர்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் நட்பு இன்று நேற்று அல்ல 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2001-ல் மாஸ்கோவில் அப்போதைய இந்திய PM வாஜ்பாய் புடினை சந்தித்தார். அவருடன் குஜராத் CM-மாக இருந்த மோடியும் சென்றிருந்தார். அதிலிருந்து இருவருக்கும் இடையேயான நட்பு மலர்ந்திருப்பதாக அறியப்படுகிறது.
News December 5, 2025
வைகோவின் முடிவால் திமுகவுக்கு நெருக்கடியா?

2021 தேர்தலில் 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் நின்றது மதிமுக. எனவே இம்முறை தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறவும், கட்சியினரை திருப்திப்படுத்தவும் வைகோ முடிவுசெய்துள்ளாராம். இதற்காக, ஏற்கெனவே வென்ற 4 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், காங்., விசிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தங்களுக்கும் ஒதுக்கவேண்டும் என மதிமுக திமுகவிடம் முறையிடுவதாக பேசப்படுகிறது.


