News August 8, 2024
ALERT: இங்கெல்லாம் கனமழை அடித்து வெளுக்கும்.

தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் 11ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
Similar News
News November 17, 2025
நடிகை அதிதி ராவ் பெயரில் வாட்சப்பில் மோசடி

நடிகர் சித்தார்த்துடனான திருமணத்துக்கு பின் நடிகை அதிதி ராவ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் அவரது பெயரை பயன்படுத்தி, வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசி மோசடியில் ஈடுபடுவதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது டீம் மூலமாகத்தான் அனைத்தையும் செய்வதாகவும், இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அதிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 17, 2025
CINEMA 360°: நாய்க்குட்டிக்கு பிறந்தாள் கொண்டாடிய திரிஷா

*டாப் ஸ்டார் பிரசாந்த் சினிமாவில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். *தனது நாய்க்குட்டிக்கு நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். *வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழை கிடைத்துள்ளது. *புதுமுகங்கள் நடித்துள்ள ‘பஞ்சாயத்து’ வெப் சீரிஸ் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
News November 17, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். *சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை. *எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும். *சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.


