News October 25, 2024

ALERT: இங்கெல்லாம் கனமழை வெளுக்கப்போகுது

image

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.

Similar News

News January 13, 2026

‘பராசக்தி’ படத்தை தடை செய்யுங்க: காங்., முழக்கம்

image

SK-வின் ‘பராசக்தி’ படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது. இது முழுக்க திமுக சார்பு படம்; 1965-ல் கோவைக்கு வராத இந்திரா காந்தியை அங்கு வந்ததாகவும், அவர் கண் முன்னே ரயில் எரிப்பு போராட்டம் நடந்ததாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நடக்காத ஒன்றை இப்படத்தில் திணித்த படக்குழு மன்னிப்பு கேட்டு, அனைத்து காட்சிகளையும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது

News January 13, 2026

விஜய்க்கு மீண்டும் அதிர்ச்சி.. சுடச்சுட தகவல்

image

டெல்லியில் CBI விசாரணையை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டார் விஜய். புஸ்ஸி ஆனந்த், நிர்மல், ஆதவ்விடம் 3 நாள்கள் CBI விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய் கேட்டுக் கொண்டதால், ஒரு நாளோடு விசாரணை முடிந்தது. இந்நிலையில், ஜன.19-ல் ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு வந்ததும் வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் உடனடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

News January 13, 2026

சபரிமலையில் நாளை மகரஜோதி!

image

சபரிமலை, மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகரவிளக்கை முன்னிட்டு, இன்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆக குறைக்கப்பட்ட நிலையில், நாளை 30,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

error: Content is protected !!