News October 24, 2025
ALERT: மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புங்க

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என IMD அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், வரும் 28-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
மத்திய அரசில் 348 காலியிடங்கள்.. ₹30,000 சம்பளம்!

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 கிராமின் டாக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமுள்ள 348 காலியிடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. 20- 35 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாதம் ₹30,000 சம்பளம் வழங்கப்படும். வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு இங்கே <
News October 24, 2025
மழையை எதிர்கொள்ள தயார்: கே.என்.நேரு

சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த அவர், தண்ணீர் தேங்கும் இடங்களில் நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். CM உத்தரவின் பேரில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
News October 24, 2025
Dejavu ஏற்படுவது எப்படி தெரியுமா?

புதிதாக நடக்கும் ஒரு சம்பவத்தை பார்க்கும்போது, ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது தான் Dejavu. இது மூளையில் ஏற்படும் சிறிய சிக்னல் பிழையால் நடக்கிறது. அதாவது, புதிதாக ஒரு சம்பவம் நடக்கும்போது அதை hippocampus பகுதி Store செய்து வைக்கும். அப்போது உங்கள் மூளை, இதை ஏற்கனவே பார்த்ததுபோல தவறான சிக்னல் அனுப்புவதால் hippocampus பகுதி குழம்புகிறது. இதனால்தான் உங்களுக்கு Dejavu ஏற்படுகிறது. SHARE.


