News January 30, 2026

ALERT: வேலூரில் மின் தடை: உங்க ஏரியா இருக்கா?

image

வேலூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கோணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

Similar News

News February 4, 2026

வேலூரில் 15,200 பழச்செடி தொகுப்புகள் விநியோகம்

image

தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் மா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, சீதா ஆகிய பழச்செடிகள் இருக்கும். இதுவரை 15,200 பேருக்கு மானியத்துடன் பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 4, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

News February 4, 2026

வேலூரில் இந்த பகுதிகளுக்கு மின் தடை!

image

வேலூரில் உள்ள திருவலம், கர்ணாம்பட்டு, சத்துவாச்சாரி, வடுகந்தாங்கல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்து உள்ளது. எனவே பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த படுகின்றனர்.

error: Content is protected !!