News November 30, 2024
டாஸ்மாக்கில் குவியும் மதுபிரியர்கள்

சென்னையில் பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில், மழை பெய்தாலும் பரவாயில்லை , வெள்ளநீர் சூழ்ந்தாலும் கவலையில்லை என மதுபிரியர்கள், டாஸ்மாக் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News April 28, 2025
பம்பர் ஆஃபர்.. அரசு விரைவுப் பஸ்சில் இலவச பயணம்!

இந்த சம்மரில் அரசு விரைவுப் பஸ்சில் பயணித்தால், குலுக்கல் முறையில் 75 பேருக்கு இலவச பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறதாம். ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜுன் 15-ம் தேதி வரை பயணிப்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து இந்த பரிசு அளிக்கப்படும். முதல் பரிசாக, 25 பேர் ஓராண்டுக்கு 20 முறையும், 2-ம் பரிசாக 25 பேர் 10 முறையும், 3-ம் பரிசாக 25 பேர் 5 முறையும் பயணிக்கலாம். இப்பவே கிளம்புங்க!
News April 28, 2025
மகளிர் உரிமை: ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் விடுபட்டோருக்கும் விரைவில் இந்தத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து வந்தது. அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய CM ஸ்டாலின், ஜூனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார். இந்நிலையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஜூன் 4-இல் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.
News April 28, 2025
பஹல்காம் தாக்குதல் செய்தி.. சர்ச்சையில் சிக்கிய பிபிசி

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிபிசி வெளியிட்ட செய்திகள் சர்ச்சையானது. “காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கான விசாக்களை PAK நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இது இந்தியா மீது தவறு என்பது போல் உள்ளதாக பலர் விமர்சித்தனர். இதேபோல் தீவிரவாதிகள் என்பதற்கு பதில் போராளிகள் என்று குறிப்பிட்டதை கண்டித்தும் மத்திய அரசு பிபிசி-க்கு கடிதம் எழுதியுள்ளது.