News June 26, 2024
விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டனர். பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் இன்று காலை வரை 61 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் (62) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 26, 2025
BREAKING: பாதி வழியிலேயே திரும்பினார் செங்கோட்டையன்

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து காலை 8:30 மணிக்கு செங்கோட்டையன் புறப்பட்டார். இதைப்பார்த்த செய்தியாளர்கள், கேமராவுடன் அவரின் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதையறிந்த உடனே பாதி வழியிலேயே 8:45 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு காரை திருப்பினார். MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்றே விஜய்யை அவர் சந்திப்பார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 26, 2025
புதுச்சேரியிலும் கால் பதிக்கும் விஜய்.. டிச.5-ல் ரோடு ஷோ

புதுச்சேரியில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றாலும், புஸ்ஸி ஆனந்தின் சொந்த ஊரும் இதுதான். இதனால், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலிலும் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், டிச.5-ம் தேதி காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை (தமிழ்நாடு எல்லை ஆரம்பத்தில் இருந்து புதுச்சேரி எல்லை முடிவு வரை) ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி கேட்டுள்ளார்.
News November 26, 2025
FLASH: ஜெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தைகள்!

கடந்த 2 நாள்களாக சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் இன்று(நவ.26) வர்த்தகம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,253 புள்ளிகளிலும், நிஃப்டி 210 புள்ளிகள் உயர்ந்து 26,095 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. JSW Steel, Adani Ports, Trent, TMPV, Axis Bank நிறுவனங்களின் பங்குகள் 2 – 4% உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


