News June 26, 2024

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டனர். பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் இன்று காலை வரை 61 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் (62) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News November 26, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

<<18304103>>அரையாண்டு தேர்வு அட்டவணையை<<>> வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. டிச.23 அன்று மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடையும். இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும். அதன்பின், 10 நாள்களில் பொங்கல் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News November 26, 2025

உலகின் மிக அழகான கோட்டைகள் PHOTOS

image

கோட்டைகள், அரண்மனைகள் என்றாலே, ஏதோவொன்று நம்மை ஈர்க்கிறது. அவை, வரலாற்று கதைகளா, பிரம்மாண்டமான கட்டட கலையா, எது என்று தெரியவில்லை. ஆனால், நாம் வியந்து போகிறோம். அந்த வகையில், மிக அழகான கோட்டைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு கோட்டையும் இடம்பிடித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News November 26, 2025

புஜாராவின் மைத்துனன் தற்கொலை

image

ராஜ்கோட்டில், கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனன் ஜீத் பபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் தான், Ex-Fiance கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஜீத் பபாரி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீள்வதற்கு வழிதெரியாமல் தான் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!