News June 26, 2024
விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டனர். பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் இன்று காலை வரை 61 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் (62) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News October 31, 2025
மீண்டும் புயல் சின்னம்.. கனமழை வெளுக்கப் போகுது

மத்திய கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கடந்த வாரம் மொன்தா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதால், நவ.6-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
TTV, OPS, KAS கூட்டு ஒரு நாள் பரபரப்பு: RB உதயகுமார்

TTV, OPS, செங்கோட்டையன் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை அறிவித்துள்ளனர். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த RB உதயகுமார், அவர்கள் 3 பேரும் சேர்ந்தது ஒருநாள் பரபரப்பு என்று விமர்சித்துள்ளார். அதை கூடுதல் பரபரப்பாக்காமல் இருந்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறிய அவர், இதுபோன்று நடப்பது புதிதல்ல எனக்குறிப்பிட்டார்.
News October 31, 2025
17 லட்சம் உயிர்களை காவு வாங்கிய காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசு பலி குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 17.2 லட்சம் பேர் காற்று மாசுபாடு காரணமாக பலியாகியுள்ளதாக, The Lancet Countdown on Health and Climate Change அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு, 2010-ம் ஆண்டிலிருந்து 38% அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


