News June 26, 2024
விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டனர். பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் இன்று காலை வரை 61 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் (62) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News January 7, 2026
‘பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாற்றம்’

Modern Day கிரிக்கெட் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது என டெஸ்ட் ஜாம்பவான் நீல் ஹார்வே கூறியுள்ளார். மணிக்கட்டை சுழற்றி பந்தை தட்டினாலே பவுண்டரி செல்லும் அளவிற்கு சக்திவாய்ந்த Bats பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். பல பலவீனமான அணிகள் சர்வதேச போட்டிகளில் ஆடுவதாகவும், அவர்களுக்கு எதிராக தானும் விளையாடி இருக்கலாம் என ஆசைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?
News January 7, 2026
மதுரோவின் கைதின் போது 52 ராணுவ வீரர்கள் பலி

ஹாலிவுட் படத்தின் அதிரடி காட்சி போல் வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்தனர். இதில் 55 வெனிசுலா மற்றும் க்யூபா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 23 வெனிசுலா வீரர்களும், 32 க்யூபா வீரர்களும் உயிரிழந்துள்ளதாக இருநாடுகளும் தனித்தனியாக அறிவித்துள்ளன. முதலில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பின் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் வெனிசுலாவில் தரையிறங்கியுள்ளன.
News January 7, 2026
கபில் தேவ் பொன்மொழிகள்

*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள். * நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. *உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.


