News June 26, 2024
விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டனர். பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் இன்று காலை வரை 61 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் (62) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 14, 2025
ஜெயலலிதா வாட்ச் கலெக்ஷன் PHOTOS

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வலிமையான, தைரியமான பெண் அரசியல் தலைவர்களில் ஒருவர். தலைமை பண்பில் சிறந்து விளங்கியவர், வாட்ச் பிரியராகவும் இருந்துள்ளார். அவரிடம் ஏராளமான வாட்ச் கலெக்ஷன் இருந்துள்ளது. அதில், அவர் அணிந்திருந்த சில பிரபல வாட்ச்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 14, 2025
அடுத்தடுத்து ஹிட் அடிப்பாரா சிவகார்த்திகேயன்?

‘SK24′ பட ஷூட்டிங் டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தில், ‘பராசக்தி’-க்கு (SK25) பிறகு ஸ்ரீலீலா, SK உடன் இணைந்து ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் பக்கா கமர்ஷியலாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கும் ‘SK26′ படத்தின் கதையும் சிவாவுக்கு நன்றாக அமையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
News November 14, 2025
ஊழல் வழக்கில் அம்பானி: மும்பை HC நோட்டீஸ்

இந்தியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா கோதாவரி படுகையில், ₹12,000 கோடி மதிப்புள்ள ONGC எரிவாயுவை சட்டவிரோதமாக அம்பானி திருடியதாக கூறி, கிரிமினல் வழக்குப்பதியவும், சிபிஐ விசாரணை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மும்பை HC, சிபிஐ மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், நவ.18-ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


