News June 20, 2024

கள்ளச்சாராயம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு பலி எண்ணிக்கை 16ஆக இருந்த நிலையில், தற்போது 29ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Similar News

News November 15, 2025

அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு

image

வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக <<17314173>>அனில் அம்பானி<<>>க்கு ED மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வீடியோ காலில் ஆஜராக விடுத்த கோரிக்கையும் மறுத்துள்ளது. முன்னதாக, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ADAG குழுமத்திற்கு சொந்தமான 4 நிறுவனங்கள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.

News November 15, 2025

பிஹார் ‘சிங்கம்’ தோல்வி

image

பிஹாரில் 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட ஷிவ்தீப் லண்டே தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பணி காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், பிஹாரின் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்து, அராரியா மற்றும் ஜமால்பூர் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.

News November 15, 2025

J.K.ரௌலிங் பொன்மொழிகள்

image

*உலகை மாற்றுவதற்கு நமக்கு மந்திரம் தேவையில்லை. நமக்குத் தேவையான எல்லாச் சக்தியையும் நாம் ஏற்கனவே நமக்குள் சுமந்து செல்கிறோம். *நாம் அனைவரும் நமக்குள் அதிசயங்களை வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. *அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் கற்பனைதான் அடித்தளம். *நான் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன், பெரும்பாலும் இரண்டாவதை அடைவதற்கு முதலாவது வழிநடத்துகிறது.

error: Content is protected !!