News June 26, 2024
விஷச்சாராயம் மரணம்: இன்று விசாரணை

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு முகமை விசாராணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாமக மற்றும் அதிமுக கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்பட உள்ளன.
Similar News
News August 24, 2025
அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா

சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு, தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்று மத்திய பாஜக அரசை ஆ.ராசா விமர்சித்துள்ளார். தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை என சாடிய அவர், இந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா அமித்ஷா அவர்களே! என்று கொந்தளித்துள்ளார்.
News August 24, 2025
நேற்று ஆதரவு.. இன்று விஜய்க்கு எதிர்ப்பு.. என்ன நடந்தது?

நேற்று வரை விஜய்யை எங்க வீட்டு பிள்ளை; எங்கள் தம்பி என்று அழைத்து வந்த பிரேமலதா, இன்று விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். வாக்கை பிரிப்பதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினாரா என கேள்வி எழுந்தது. இதுகுறித்து பிரேமலதா, எங்களுக்கென தனி இயக்கம் இருக்கிறது. எங்கள் கட்சியில் வாரிசுகள் இருக்கிறார்கள், கேப்டன் பெயரை வேறொருவர் பயன்படுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
கணிதத்தில் பஞ்சாங்கத்தை சேர்க்க பரிந்துரை

இளநிலை பட்டப்படிப்புகளின் கணித பாடத்தில் பாரத அட்சர கணிதம் (இந்திய அல்ஜீப்ரா) மற்றும் பஞ்சாங்கம் ஆகியவை குறித்து கற்பிக்க UGC வரைவு பாடத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சடங்குகள், திருவிழாக்களின்போது பஞ்சாங்கம் மூலம் எவ்வாறு நல்ல நேரம் கணிக்கப்படுகிறது பற்றியும் கற்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது. வான சாஸ்திரம், சூரிய சித்தாந்தம் ஆகியவையும் பாடத்திட்டத்தில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.