News September 14, 2024
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம் ₹32 கோடிக்கு ஏலம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று ₹32 கோடிக்கு ஏலம் போயுள்ளது. அணு ஆயுதங்களின் திறன் குறித்து, 1939ஆம் ஆண்டு USA அதிபராக இருந்த ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெட்டிற்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். இந்தக் கடிதம் அமெரிக்க அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னாளில், மனித உயிர்கள் பறிபோக அணு ஆயுதம் காரணமாக இருந்ததை அறிந்து அவர் வேதனை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 5, 2025
Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

*SUPER CUP கால்பந்து இறுதிப்போட்டிக்கு எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் முன்னேற்றம் * ILT20-ல் MI எமிரேட்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது *U-21 டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் சிங் பிஸ்ட் வெண்கலம் வென்றார் *HCL ஸ்குவாஷ் தொடரின் ஃபைனலில் அனாஹத் சிங்-ஜோஷ்னா சின்னப்பா மோதல் *டி20 போட்டிகளில் சுனில் நரேன் 600-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்
News December 5, 2025
BREAKING: செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

புதுச்சேரியில் டிச.9-ல் பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM-ல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இனி பொதுக்கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தவெகவில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.
News December 5, 2025
சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: TN அரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை HC-ன் உத்தரவை எதிர்த்து SC-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் ஏற்ற கோருவதாகவும், அவ்விடம் தர்காவுக்கு 15 மீ தொலைவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மதுரை HC உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், தேவையற்ற சச்சரவை தவிர்க்கவே தீபம் ஏற்ற அனுமதி தரவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.


