News January 3, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பந்தக்கால்

image

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அலங்காநல்லூரில் ஜனவரி 16இல் நடைபெறும் இந்த போட்டிக்கான பணிகளுக்குப் பந்தக்கால் நடப்பட்டது. ஜன.14இல் அவனியாபுரம், ஜன.15இல் பாலமேடு, ஜன.16இல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்’ மைதானத்தில் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.

Similar News

News September 12, 2025

Health Tips: இத தினமும் பண்ணா முதுகுவலிக்கு BYE சொல்லலாம்

image

முதுகு வலி இருப்பவர்கள் சில உடற்பயிற்சிகளை செய்தால், அது மேலும் வலியை அதிகரிக்க செய்யும். அதனால் எந்த உடற்பயிற்சி முதுகு வலியை நீக்கும் என தெரியாமல் தவிப்பர். இனி இந்த குழப்பம் வேண்டாம். தினமும் 78 நிமிடங்களுக்கு மேல் நடப்பவர்களுக்கு முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு 13% வரை குறைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதோடு, கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். SHARE.

News September 12, 2025

அதிமுக கூட்டணியில் முக்கிய மாற்றம்.. பாஜக எடுத்த முடிவு!

image

டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், NDA கூட்டணி, உள்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா, JP நட்டா, BL சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்து விலகிய OPS, TTV-யை டெல்லிக்கு அழைத்து பேச பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. ஆனாலும், ஒருங்கிணைப்பு விவகாரத்தில் EPS, திட்டவட்டமாக நோ சொல்லி வருவதால், அவரை சமாதானம் செய்யவும் ஒருபுறம் முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

News September 12, 2025

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: இந்தியா

image

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா., சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை மதிப்பதாக தெரிவித்த இந்தியா, தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, 2015, ஜன.9-க்கு முன்பு அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக தங்க இந்தியா அனுமதி அளித்திருந்தது.

error: Content is protected !!