News April 24, 2024
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களின் கோவிந்தா!, கோவிந்தா! முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகளவில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
Similar News
News August 23, 2025
ராசி பலன்கள் (23.08.2025)

➤ மேஷம் – ஜெயம் ➤ ரிஷபம் – கவலை ➤ மிதுனம் – பக்தி ➤ கடகம் – பரிசு ➤ சிம்மம் – நன்மை ➤ கன்னி – வெற்றி ➤ துலாம் – உதவி ➤ விருச்சிகம் – சிக்கல் ➤ தனுசு – நோய் ➤ மகரம் – லாபம் ➤ கும்பம் – திறமை ➤ மீனம் – சாதனை.
News August 23, 2025
Gpay, Phonepe பயன்படுத்த கட்டணம்?

இதுவரை இலவசமாக உள்ள UPI சேவைக்கு, விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் UPI சேவையை இலவசமாக வழங்க முடியாது என RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியபோதே இந்த சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், சில்லறை வணிக பரிவர்த்தனையை கையாளும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட 0.25% ஊக்கத்தொகையை அரசு தற்போது 0.15% ஆகக் குறைத்துள்ளதால், விரைவில் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.
News August 22, 2025
காபி பிரியர்களே உஷார்!

தினசரி 2 கப் காபி குடிப்பது உடல்நலனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுதான் இதுவரை டாக்டர்கள் பரிந்துரைத்தது. ஆனால், காபி குடிப்பது உடல் சத்துகளை உட்கவர்வதை பாதிப்பதாக, அண்மை ஆய்வில் தெரிய வந்துள்ளது. காபியில் உள்ள சில உட்பொருள்கள், நமது உணவிலிருந்து இரும்பு, வைட்டமின் பி, சி, டி, சத்துகள் உட்கவர்வதை தடுக்கிறது. மேலும், நெஞ்சரிச்சலையும் காபி அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. SHARE IT!