News April 24, 2024

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

image

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களின் கோவிந்தா!, கோவிந்தா! முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகளவில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

Similar News

News January 3, 2026

பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

image

பொங்கல் பரிசுத்தொகைக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுவாக பொங்கல் பரிசு பணம் ரேஷன் கடைகளில் தான் வழங்கப்படும். ஆனால் இம்முறை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பணத்தை கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்நடைமுறையை மேற்கொள்ளலாமா என பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.

News January 3, 2026

முக்கியமான Calls-ஐ மிஸ் பண்ணாம இருக்க DO THIS

image

வீட்டில் உள்ளவர்கள் அவசர தேவைக்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON- செய்யுங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.

News January 3, 2026

யார் இந்த வேலுநாச்சியார்?

image

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாக 1730-ல் பிறந்தார். தனது கணவர் மறைவையடுத்து, ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கையை 1780-ல் மீட்டெடுத்தார். இதனால் இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என அழைக்கப்படுகிறார். 2008-ல் மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த வீரமங்கையை பெருமைப்படுத்தியது.

error: Content is protected !!