News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் விலையில் மாற்றமில்லை!

அட்சய திருதியையொட்டி தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தங்கம் விலையில் மாற்றமில்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,980-க்கும், சவரன் ₹71,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் 1 கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 விலை உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News December 17, 2025
பாதுகாப்பற்ற அரசுப்பள்ளி கட்டடங்கள்: சீமான்

<<18583116>>திருவள்ளூரில் <<>>சுவர் இடிந்து விழுந்து மாணவன் இறந்தது, வேதனையளிப்பதாக சீமான் கூறியுள்ளார். கடந்தகால துயர்களை படிப்பினையாக கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் பள்ளிகளின் தரம் மேம்பட்டிருக்கும், ஆனால் அதை செய்யாமல் DMK அரசு அலட்சியம் காட்டியதாக அவர் சாடியுள்ளார். கார் பந்தயம், கலைஞர் அரங்கம் என பல நூறு கோடிகளை வீண்விரயம் செய்யும் அரசிடம் பள்ளிகளை தரமானதாக மாற்ற நிதி இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 17, 2025
பொங்கல் பரிசு.. வெளியானது முக்கிய தகவல்

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே ஜன.3 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், ஜன.9-ம் தேதி முதல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
News December 17, 2025
வீட்டை கோயிலாக்கும் மார்கழி கோலங்கள்!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய தத்துவம், பச்சரிசி மாவில் போடும் கோலங்களால் உயிர்பெறுகிறது. எறும்புகளுக்கும், சிறு உயிர்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை மார்கழி மாதத்தில் பின்பற்றுவது கூடுதல் சிறப்பு. இதனால் வீட்டில் செல்வம், செழிப்பு பெருகும் என நம்பப்படுகிறது. அப்படியாக, மார்கழியில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.


