News October 14, 2025
”ரசிகர்கள் பாதுகாப்பில் அஜித்துக்கு அக்கறை”

எந்தவொரு விஷயத்திலும், முடிவெடுப்பதில் அஜித் தான் கிங் என்று பார்த்திபன் கூறியுள்ளார். சினிமா புகழையும், ரசிக கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் அஜித் என்று X-ல் அவர் பதிவிட்டுள்ளார். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்ட காரணத்தினால் தான், அவர் பட ப்ரொமோஷனுக்கு கூட வருவதில்லை என்றும் பார்த்திபன் பேசியுள்ளார்.
Similar News
News October 14, 2025
பெளர்ணமி நிலவாய் பிரகாசிக்கும் ருக்மினி!

‘என் மூச்சவ பேச்சவ, பேர் சொல்லும் அழகவ, எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ’ என்ற ‘டியூட்’ பாடல் வரிகளை தமிழ் ரசிகர்களை ரிபீட் மோடில் பாட வைத்துவிட்டார் ருக்மினி வசந்த். மூன்றே படத்தில் ரசிகர்களின் மனதில் அடுத்த 30 வருடங்களுக்கு குடியேறிவிட்ட அவர், புதிய போட்டோஷுட் நடத்தி SM-ல் பதிவிட்டுள்ளார். இதற்கு ஹார்ட் பதிவிடும் ரசிகர்கள், அடுத்த தமிழ் படத்தின் அப்பேட் கேட்டு அன்பு தொல்லை கொடுக்கின்றனர்.
News October 14, 2025
RBI-யின் புதிய Digital money: பேமென்டுக்கு NO இண்டர்நெட்

இண்டர்நெட் கிடைக்கவில்லை என்றால் UPI பேமண்ட் செய்ய முடியாமல் பலர் தவிப்பதை பார்க்க முடியும். அவர்களுக்காகவே RBI புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது ‘ஆஃப்லைன் டிஜிட்டல் ரூபாய்’ என்ற திட்டத்தின் மூலம் Digital money-ஐ நிஜமான பணத்தை போலவே பயன்படுத்தலாம். UPI ஸ்கேனர் மூலம் இந்த பணத்தை செலுத்தலாம். இண்டர்நெட் கிடைத்தவுடன் பணம் RBI கணக்கில் வரவு வைக்கப்படும். SHARE IT.
News October 14, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின்

ஆம்ஸ்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில் சதீஷ் சிவா, ஹரிஹரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மறைந்த ரவுடி நாகேந்திரனின் மரணத்தால், இறுதிச் சடங்குகள் செய்ய அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு 28-ம் தேதி வரை ஜாமின் தரப்பட்டுள்ளது.