News April 25, 2024
அஜித் பவாரின் மனைவி வங்கி மோசடி வழக்கு முடித்து வைப்பு

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கை பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறை முடித்துவைத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாராமதி தொகுதியில் சுனேத்ரா போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் மீதான கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் அவர் மீது குற்றமில்லை எனவும் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
Similar News
News January 22, 2026
BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 22, 2026
BREAKING: 7 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சோகம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பல தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News January 22, 2026
பேரவையில் அமளி… அதிமுக வெளிநடப்பு!

விவசாயிகள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி EPS தலைமையிலான அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். விவசாயிகள் பிரச்னை குறித்து ஜீரோ நேரத்தில் பேச அனுமதி தரும்படி EPS கோரினார். ஆனால் நாளை இதுகுறித்து பேசலாம் எனக்கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசமான அதிமுக MLA-க்கள் அமளியில் ஈடுபட்டதுடன், பேரவையில் இருந்து வெளியேறி திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


