News August 19, 2025
இன்று இரவுடன் ₹249 பிளானை ரத்து செய்யும் ஏர்டெல்!

முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், இன்று நள்ளிரவுடன் முக்கியமான ரீசார்ஜ் பிளானை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹249 ரீசார்ஜ் செய்தால் 28 நாள்களுக்கு இலவச அழைப்புகளுடன் தினமும் 1GB இன்டர்நெட் சேவையை அந்நிறுவனம் வழங்கி வந்தது. இந்த பிளான் இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த பிளானை ஜியோ நிறுவனம் நேற்று நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 16, 2026
ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க விரைந்தார் உதயநிதி!

மதுரை, பாலமேட்டில் இன்னும் சற்றுநேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக காலையிலேயே எழுந்து தயாரான அவர், வாடிவாசலுக்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் போட்டியானது தொடங்க உள்ளது. இன்று 1,000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் களம் காண காத்திருக்கின்றனர். சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
News January 16, 2026
BREAKING: முதல்வர் ஸ்டாலினின் 4 புதிய வாக்குறுதிகள்

திருவள்ளுவர் தினமான இன்று, தமிழக மக்களுக்கு 4 புதிய வாக்குறுதிகளை அளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். *சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல். *வறியோர் எளியோர் வாழ்வுயுர மனிதநேயத் திட்டங்கள். *இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள். *தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News January 16, 2026
நாட்டின் வணிக தலைநகரை கைப்பற்றுவது யார்?

மகாராஷ்டிராவில் நேற்று மும்பை உள்பட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜக தலைமையிலான <<18868876>>மகாயுதி கூட்டணியே<<>> பெரும்பாலான இடங்களில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.


