News October 24, 2024
மக்கள் மனதை அள்ளிய AIRTEL.. சல்யூட் சார் ❤️❤️

மக்களுக்கு பயனளிக்கும் அசத்தலான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ₹ 239, ₹ 399 மற்றும் ₹ 969 ஆகிய 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தரப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களை செய்தவர்கள், விபத்தில் உயிரிழந்தால் ₹ 1லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றால் ₹ 25 ஆயிரமும் காப்பீட்டு தொகையாக ஏர்டெல்லே வழங்குகிறது. Share It.
Similar News
News December 9, 2025
விஜய்க்காக ‘மொட்டை’ அடித்த பெண்

கரூர் சம்பவத்திற்கு பின் பொதுவெளியில் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் வேண்டி, புதுச்சேரியை சேர்ந்த தவெக பெண் தொண்டர் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும், இந்த முடி காணிக்கையை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் அப்பெண் அறிவித்துள்ளார்.
News December 9, 2025
புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீஸிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்களால் பலர் இறந்துள்ளனர், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என பெண் SP ஈஷா சிங் கறாராக கூற, அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். இதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.
News December 9, 2025
லஞ்சம் கேட்குறாங்களா? இந்த நம்பருக்கு உடனே அடிங்க

அரசு சேவையை பெற அரசு அலுவலகங்களை நாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீங்கள் புகாரளிக்கலாம். உடனடியாக 1064 / 1965 -க்கு அழைத்தோ அல்லது dvac@nic.in-க்கு மெயில் மூலமாகவோ புகாரளியுங்கள். புகாரளித்தவரின் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமான இன்று (டிச.9), லஞ்சத்துக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்க அனைவரும் முன்வருவோம். SHARE.


