News July 11, 2025
₹189-க்கு புதிய பிளானை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!

ஏர்டெல்லில் இன்டர்நெட்டுடன் சேர்த்தே குறைந்தபட்சமாக ₹211-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதனால், இன்டர்நெட் பயன்படுத்தாத பெரியவர்கள் ரீசார்ஜ் செய்யாமலே விட்டுவிடுகின்றனர். இதனால், சிம் inactive ஆகி விடுகிறது. இதற்கு தீர்வாக, யூஸர்களுக்கு புதிய ₹189 திட்டத்தை ஏர்டெல் அறிவித்துள்ளது. 21 நாள்களுக்கு 1 GB டேட்டாவுடன், Unlimited calls & 300 SMS இந்த பிளானில் வழங்கப்படுகிறது.
Similar News
News July 11, 2025
மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்

மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரனின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
News July 11, 2025
NDA கூட்டணியில் உள்ளோம்: ஜான் பாண்டியன்

அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இருக்கிறோம் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், கூட்டணியில் தொடர்வது குறித்து தேர்தல் நேரத்தில்தான் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணிக்கு தங்களை அழைக்கவில்லை என்றும் அழைத்தால் அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்போம் எனவும் ஜான் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
News July 11, 2025
2027 ஆகஸ்டில் ஓய்வு.. ஜெகதீப் தன்கர் அறிவிப்பு

2027 ஆகஸ்டில் ஓய்வு பெற இருப்பதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார். முன்னதாக, துணை ஜனாதிபதியாகும் முன்பு மே.வங்க ஆளுநராக தன்கர் பதவி வகித்தார். பின்னர் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணியால் முன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.