News July 7, 2024
உயிரை எடுக்கும் காற்று மாசு

2008 – 2019 வரை டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் காற்று மாசு காரணமாக ஏற்படும் மரணங்கள் 7% அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 28,67 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், PM-2.5 காற்று மாசு 48 மணி நேர சுழற்சியில் 10 மைக்ரோகிராம் அதிகரிக்கும் போது அது பெங்களூரில் உயிரிழப்பை 3% வரை அதிகரிக்கிறது. டெல்லியை விடப் பெங்களூரில் ஆபத்து 10 மடங்கு அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 24, 2025
மோசடி வழக்கில் சூர்யா வீட்டு பணி பெண் உட்பட 4 பேர் கைது

நடிகர் சூரியாவுக்கு 2021-ம் ஆண்டு முதல் தனி பாதுகாவலராக உள்ளவர் அந்தோணி. இவர் சூர்யா வீட்டில் வேலை செய்யும் சுலோச்சனாவின் மகன் நடத்தும் தங்க நாணயம் திட்டத்தில் ₹50 லட்சம் வரை டெபாசிட் செய்து ஏமாந்துள்ளார். ₹50 லட்சத்தில் ₹7 லட்சம் மட்டுமே அந்தோணிக்கு திரும்ப கிடைத்ததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுலோச்சனா, அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News September 24, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 24, புரட்டாசி 8 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை:10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News September 24, 2025
PhonePe, CRED-ல் இனி இந்த சேவையை பெற முடியாது

PhonePe, CRED போன்ற ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் அம்சம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் அடையாளங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், RBI-ன் புதிய விதி, மேற்கூறிய சேவையை நிறுத்தியுள்ளது. இனி நெட்பேங்கிங், UPI, NEFT மற்றும் காசோலை மூலம் மட்டுமே வாடகை செலுத்த முடியும்.