News October 22, 2025
டெல்லியை கலங்கடித்த காற்று மாசு!

தலைநகரில் காற்று மாசு வழக்கமான ஒன்று. ஆனால், தீபாவளியன்று உச்சம் தொட்ட காற்று மாசு, கண்காணிப்பு நிலையங்களையே செயலிழக்க வைத்துள்ளது. 39 நிலையங்களில் வெறும் 9 மட்டுமே தரவுகளை பதிவு செய்துள்ளன, மற்றவை செயலிழந்துள்ளன. மாசு அளவு அதிக அளவை தாண்டும்போது (இந்திய வரம்பு= 60 µg/m³/பதிவானது 1,000 µg/m³), துல்லியமான தரவை பதிவு செய்ய முடியாத தொழில்நுட்ப வரம்பே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 22, 2026
திருச்சி வழியாக நிரந்தர ரயில் சேவை அறிவிப்பு!

திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் ஹைதராபாத் – கன்னியாகுமரி வாராந்திர ரயில் வரும் ஏப்.1ம் தேதி முதல் நிரந்தர ரயிலாக இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் 1 குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகள், 2 குளிர்சாதன 2-ம் வகுப்பு பெட்டிகள், 6 குளிர்சாதன 3-ம் வகுப்பு பெட்டிகள், 9 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் என வலுவான கட்டமைப்புடன் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 22, 2026
35 வருடமாக ராமதாஸ் போட்டியிடாதது ஏன்?

ஒருவழியாக புதிதாக கட்சியில் இணைந்த சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துவிட்டார். ஆனால், அவர் போட்டியிடமாட்டார். இப்போது மட்டுமல்ல, 1991-ல் பாமகவை தொடங்கியது முதலே அவர் போட்டியிட்டதில்லை. தான் போட்டியிடமாட்டேன், தனது கட்சியாளர்களை தேர்தல் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இதுவரை ராமதாஸ் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
News March 22, 2026
நாளை முதல் உயர்கிறது.. மத்திய அரசு அறிவிப்பு

உள்நாட்டு விமான <<16963935>>கட்டணங்களுக்கான <<>>உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை காரணம் காட்டி, ஏற்கெனவே சில விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஏற்றியுள்ளன. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விமான பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


