News March 17, 2024

தஞ்சையில் பறக்கும்படை வாகனம் துவக்கம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் அவர்கள் நேற்று (16.03.2024) துவக்கி வைத்து கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News

News October 23, 2025

நேர்மையை பாராட்டிய காவல்துறை

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செட்டிமண்டபம் பகுதியில் சாலையில் அதே பகுதியை சார்ந்த குமார் செல்லும்போது சாலையில் கண்டெடுக்கப்பட்ட செல்போன் மற்றும் நகையில் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் அதை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை பாராட்டிய காவல் ஆய்வாளர் மீனா மற்றும் உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் காவலர்கள் சந்தியா ஆகியோர் விசாரணை செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News October 23, 2025

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News October 23, 2025

தஞ்சையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரம்

image

தஞ்சாவூர், கும்பகோணம் ARR ரோடு ஸ்ரீமந்த் நடன கோபால நாயகி சுவாமிகள் திருமண மஹாலிலும், திருபுவனம் JKVS மஹாலிலும், வல்லம் சமுதாய கூடத்திலும், நாளை (அக்.24) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. மேலும் திட்டை கிராம பொது சேவை மையத்திலும், காரியாவிடுதி சமுதாய கூடத்திலும், சேதுபாவாசத்திரம் மருங்கப்பள்ளம் பல்நோக்கு சேவை மையத்திலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!