News October 25, 2024
அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பு: இபிஎஸ்

மக்களவைத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளை நம்பியே முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் களம் காண்பதாக விமர்சித்தார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7% குறைந்துள்ளதாகவும், ஆனால் அதிமுகவின் வாக்கு வங்கி 1% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 29, 2025
BREAKING: பாமக புதிய தலைவர் அறிவிப்பு

பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து, சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயல்தலைவராக காந்திமதி, கெளரவ தலைவராக ஜி.கே.மணி, பொதுச் செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2026 தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
News December 29, 2025
மும்பை மாநகராட்சி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தாராவியை சேர்ந்த தமிழ்ப் பெண் மஞ்சுளா கதிர்வேல் வேட்பாளராக களமிறங்குகிறார். MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்தல் நடக்கிறது. மும்பையின் 227 வார்டுகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மஞ்சுளா உட்பட 15 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் நிறைந்த மும்பை மாநகராட்சிக்கு சில நல்லவர்கள் தேவை என்றும் கூறியுள்ளது.
News December 29, 2025
5 குழந்தைகள் குத்திக் கொலை

தெற்கு அமெரிக்க நாடான சூரினாமின் Paramaribo-வில், மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே இரவில் 5 குழந்தைகள் உள்பட 9 பேர் மிக கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த முழுவிவரம் வெளியாகவில்லை. இதில் படுகாயமடைந்த வேறு சில நபர்கள் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். So sad!


