News October 25, 2024
அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பு: இபிஎஸ்

மக்களவைத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளை நம்பியே முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் களம் காண்பதாக விமர்சித்தார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7% குறைந்துள்ளதாகவும், ஆனால் அதிமுகவின் வாக்கு வங்கி 1% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 30, 2025
விழுப்புரம்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால்,ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News December 30, 2025
மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு.. வந்தாச்சு அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என <<18565227>>CM ஸ்டாலின்<<>> ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான அறிவிப்பு வரு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ₹1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது, 1.30 கோடி மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News December 30, 2025
பாரதியின் கனவு PM மோடியால் நிறைவேறுகிறது: CPR

ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி CPR உரையாற்றினார். அதில், தர்மத்தின்படி வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவம் தான் நம்மை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பாரதி கண்ட கனவு PM மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை அவர் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். காசி – ராமேஸ்வரம் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் என்றும் கூறினார்.


