News December 31, 2024
அதிமுக தொடர்ந்து போராடும்: இபிஎஸ்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக EPS வேதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் DMK அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறிய அவர், உண்மைக் குற்றவாளிகளை பிடிக்கும்வரை ADMK தொடர்ந்து போராடும் என்றார். மேலும், ஞானசேகரன் புகைப்படம், தகவல்களை பார்க்கும்போது அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் அரசின் தலையீடு இருக்கலாமென சந்தேகம் வலுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழகத்தில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் கனமழை வெளுத்து வாங்குமாம். மேலும், 18-ம் தேதி வரை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கவனமாக இருங்கள்!
News September 13, 2025
இளைஞர்களுக்கு வருகிறது புதிய வேலைவாய்ப்புகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த சர்வதேச தமிழ் பொறியாளர் மன்ற மாநாட்டில் DCM உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு அரசுக்கும் வெளிநாடுகளில் உள்ள அரசு & தனியார் நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக DCM தெரிவித்துள்ளார். மேலும், பொறியாளர்களை, தொழில்முனைவோர்களாக உயர்த்தும் வகையில் திமுக அரசு செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
நீங்கள் வேலையில் நீடிக்க இதை செய்தே ஆக வேண்டும்!

எதிர்காலத்தில் ஒருவர் வேலையில் இருப்பது மிக சவாலான காரியம் என நோபல் பரிசு பெற்றவரும், DEEP MIND-ன் CEO-வுமான டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் AI மேம்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தை கணிப்பது கடினமானதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால்தான் வேலையில் நீடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.