News March 17, 2024
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6.05 கோடி பெற்ற அதிமுக

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதுதொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,” தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.5 கோடி அளித்துள்ளது. சமாஜ்வாதி ரூ.14.05 கோடி, அகாலிதளம் ரூ.7.26 கோடி நன்கொடை பெற்றுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
மக்கள்தொகை கணக்கெடுப்பு: நவம்பரில் முன்சோதனை

2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக டிஜிட்டல் முறையில் முன்-சோதனை எடுக்கப்படவுள்ளது. வீட்டு பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை நவ.10 – 30 வரையிலும், நவ.1 – 7 வரையும் சுய கணக்கெடுப்பு செய்வதற்கான சோதனையும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), ஆர்.கே.பெட் (திருவள்ளூர்), மாங்காடு (காஞ்சி) ஆகிய 3 இடங்களில் முன்-சோதனை நடத்தப்படவுள்ளது.
News October 30, 2025
ஒழுங்கற்ற மாதவிடாய்? 14 நாள் இத பண்ணுங்க போதும்!

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விலக பின்வரும் விதைகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்கள் சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் 14 நாட்கள் பூசணி, ஆளி விதைகளை சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் என டாக்டர்கள் சொல்றாங்க. பல பெண்களுக்கு பயனளிக்கும், SHARE THIS.
News October 30, 2025
சற்றுமுன்: தவெகவில் இருந்து விலகல்?

தலைமை புறக்கணிப்பதால், அதிருப்தியில் இருக்கும் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கரூர் மக்களை விஜய் சந்தித்தபோது, நட்சத்திர விடுதியின் உள்ளே நுழைய விடாததால், வெங்கட்ராமன் நீண்ட நேரமாக காரின் ஹாரனை ஒலிக்கவிட்டார். இது விஜய்க்கு தெரியவந்ததால், புதிய நிர்வாக குழு பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறுகின்றனர்.


