News December 26, 2024
தமிழகம் முழுவதும் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை ADMK சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த DMK அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். முன்னதாக, இன்று ADMK சார்பில் அண்ணா பல்கலை. முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
Similar News
News September 11, 2025
டென்னிஸ் லெஜண்டை நாட்டில் இருந்து வெளியேற்ற அழுத்தம்

24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் லெஜண்ட் ஜோகோவிச், செர்பியாவில் இருந்து வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஜோகோவிச் ஆதரித்ததால், நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால், கிரீஸ் நாட்டிற்கு அவர் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
News September 11, 2025
நடிகை ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி

<<15081057>>குடும்ப வன்முறை வழக்கில்<<>>, பிரபல நடிகை ஹன்சிகாவின் மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஹன்சிகாவின் சகோதரரின் மனைவியான முஸ்கான், தன் கணவன், மாமியாருடன் நாத்தனார் ஹன்சிகாவும் சேர்ந்து மனரீதியாக கொடுமைப் படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யும்படி ஹன்சிகா அளித்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ஹன்சிகா மற்றும் தாயார் ஜோதி இருவருக்கும் முன்ஜாமின் மட்டும் வழங்கியது.
News September 11, 2025
“Man of Steel” அல்ல “Man of Steal”: ஸ்டாலினை சாடிய தமிழிசை

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய CM, ஸ்டாலின் என்ற பெயருக்கு “Man of Steel”(இரும்பு மனிதன்) என்று பொருள் என தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் “Man of Steel” என்று சொல்வதை தமிழ்நாட்டு மக்கள்”Man of Steal”(திருட்டு மனிதன்) என்றுதான் எடுத்துக் கொள்வார்கள் என தமிழிசை விமர்சித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.