News April 16, 2024

அதிமுக: இனி 4 முனை போட்டி

image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில், அவரை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே
வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் 3 பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவி வந்தது. அண்மையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டிடிவி வசம் அதிமுக செல்லும் என கூறியிருந்தார். இதனால் அதிமுகவுக்கு இனி 4 முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 10, 2025

30% வாக்காளர்களை காணோம்: கடம்பூர் ராஜூ

image

தனது கோவில்பட்டி தொகுதியிலேயே 30% வாக்காளர்களை காணோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30% பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்; ஆனால், ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும் என்று சாடினார்.

News November 10, 2025

சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் கசாயம்!

image

சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடவும், சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் பெறவும் புதினா கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✤தேவையானவை: புதினா, மிளகுத்தூள், உப்பு ✤செய்முறை: புதினாவை கிள்ளி போட்டு, தண்ணீரில் 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை வடிகட்டி, இறக்கி உப்பு, மிளகு தூள் கலந்தால் புதினா கசாயம் தயார். அனைவருக்கும் இச்செய்தியை பகிரவும்.

News November 10, 2025

தமிழகத்தில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

image

2027 பிப்ரவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தில் 3 இடங்களில் இன்று மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, காஞ்சிபுரம் மாவட்ட மாங்காடு நகராட்சியில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன்போது, 34 வகையான கேள்விகள் மக்களிடம் கேட்கப்படும்.

error: Content is protected !!