News March 28, 2025
பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 3 அமைச்சர்கள் இன்று பதிலுரை வழங்கவிருப்பதால் இபிஎஸ்ஸை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனாலும், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 31, 2025
சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 50 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூரில் மனம் திருந்தி வாழ உள்ளதாக கூறி 50 நக்சல்ஸ் நேற்று சரணடைந்தனர். இதில் தேடப்படும் 14 முக்கிய நக்சலைட்டுகளும் அடக்கம். மொத்தமாக அவர்களின் தலைக்கு வெகுமதியாக ₹68 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களுடன் சரணடைந்தவர்களை வரவேற்பதாகவும், அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
News March 31, 2025
வளர் பிறை போல் வாழ்க்கை ஒளிர வேண்டும்: இபிஎஸ்

இஸ்லாமியர்கள் மனமகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுவதாக இபிஎஸ் ரமலான் வாழ்த்துக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர் பிறையாக ஒளிர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 31, 2025
லீக் செய்தவர் பற்றி ஏன் பேசவில்லை.. நடிகை கேள்வி!

‘சிறகடிக்க ஆசை’ நடிகையின் ‘பிரைவேட்’ வீடியோ எனக் குறிப்பிட்டு வெளியான வீடியோக்களை பற்றி சம்மந்தப்பட்ட நடிகை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரைக்கு பின் மறைந்துக்கொண்டு, இதைப் பரப்பியவர் பற்றி ஏன் யாரும் பேசவில்லை. இதைப் பரப்புவதன் மூலம், எல்லா ஆண்களும் Predators என்பதை நிரூபிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவை அடுத்து, அதை லீக் செய்தவர் யாராக இருக்கும் என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.