News March 28, 2025
பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 3 அமைச்சர்கள் இன்று பதிலுரை வழங்கவிருப்பதால் இபிஎஸ்ஸை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனாலும், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 25, 2025
தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..
News November 25, 2025
USA சமாதான வரைவு திட்டம் திருத்தம்: ஜெலன்ஸ்கி

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான USA-வின் வரைவு திட்டம் திருத்தப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 28 அம்சங்களில் இருந்து 19 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவின் பல கோரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதால் இதை வரவேற்பதாக கூறிய அவர், திட்டம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் தெரிவித்தார்.
News November 25, 2025
உங்க வேலையை இங்க காட்டாதீங்க: பிரேமலதா

தேமுதிக கொடி, பேனரை அகற்றிவிட்டால் கூட்டம் நடக்காது என்பது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என்பதை போல இருப்பதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். கோவையில் மட்டும் இந்த அராஜகம் நடப்பதாக கூறிய அவர், தேமுதிகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் மறைமுகமாக செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


