News March 18, 2024
புதுவை விசாரணை அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பாஜக. காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் கையூட்டு பெறப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாநிலத்தில் இரிடியம் கடத்தப்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 20, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT
News January 20, 2026
புதுவை தோட்டக்கலைத் துறை 50% மானியம் அறிவிப்பு

புதுச்சேரியில் தோட்டக்கலைத் துறையின் கீழ் காய்கறி (நாட்டு ரகம்/வீரிய ஒட்டு) மற்றும் மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விவசாயிகள் வாங்கும் விதைகளுக்கான செலவில் 50% மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (20.01.2026) முதல் 05.02.2026 வரை தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகம், கிராமப் பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில் வழங்கப்படுகின்றன.
News January 20, 2026
புதுச்சேரி கிராம வங்கியில் புதிய திட்டம் துவக்கம்

புதுச்சேரி கிராம வங்கியில் ஐஸ்வர்யம் என்ற புதிய சிறப்பு வைப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 555 நாட்களுக்கு அதிக வட்டி தரும் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை, கிராம வங்கி தலைவர் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும்; மற்றவர்களுக்கு 7.0 சதவீதம் வட்டியும் வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அனைத்து கிராம வங்கிகளும் தொடங்கப்படும் என கூறியுள்ளனர்.


