News March 21, 2024
இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தது அதிமுக

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு ஏப்ரல் 19ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
2-வது சிம்பொனியை அரங்கேற்றும் இளையராஜா

‘ராஜாவுக்கெல்லாம் ராஜா இந்த இளையராஜா’ என்று ரசிகர்கள், தலைமுறை தாண்டியும் உருகி வருகின்றனர். இதனிடையே, தனது முதல் சிம்பொனியை, லண்டனில் உள்ள Eventim Apollo Theatre-ல் இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், ஒட்டுமொத்த இசை உலகையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில், தனது 2-வது சிம்பொனியை நவ.17-ல் ஹங்கேரியில் உள்ள Eötvös Loránd University-ல் அரங்கேற்றம் செய்யவுள்ளார்.
News November 13, 2025
கமலை மழுங்க செய்தவர் ஸ்டாலின்: ஆர்.பி.உதயகுமார்

தன்னை எதிர்த்து கட்சி தொடங்கிய கமல்ஹாசனை அதிகாரத்தால் ஸ்டாலின் மழுங்க செய்துவிட்டார் என ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்ற ஸ்டாலின், கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இல்லத்திற்கு செல்வதில்லை எனவும் சாடியுள்ளார். தனது Failure மாடல் அரசின் செயல்பாடுகளை மறைக்க, தன்னை எதிர்க்கும் போர்வாளை திமுக மழுங்கடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
SIR-ஐ ஒத்திவைக்க கோரிய கேரளா: ECI எதிர்ப்பு

SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், SIR பணிகளை ஒத்திவைக்க கோரி கேரள அரசு, மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் SIR பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வது மாநில நிர்வாகத்திற்கு அழுத்தத்தை தருவதாக அரசு வாதிட்ட நிலையில், ECI இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


