News March 21, 2024
இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தது அதிமுக

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு ஏப்ரல் 19ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவதாகவும், இந்த தொகை எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள தகவல் மகளிருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
News September 8, 2025
செப்டம்பர் 8: வரலாற்றில் இன்று

*1944 – இரண்டாம் உலகப் போரில் வி-2 ஏவுகணை மூலம் லண்டன் நகரம் மீது தாக்குதல். *1946 – பல்கேரியாவில் முடியாட்சி ஒழிப்பு. *1954 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது. *2006 – மகாராஷ்டிரா, மாலேகான் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொலை. *2010 – நடிகர் முரளி மறைந்த நாள்.
News September 8, 2025
மிஷ்கினால் கண்கலங்கிய பெற்றோர்

மாணவியின் கல்விச் செலவை ஏற்ற இயக்குநர் மிஷ்கினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தனியார் டிவி நிகழ்ச்சியில் நடுவராக உள்ள மிஷ்கின், அதில் போட்டியாளரான திஷாதனாவின் நான்கரை ஆண்டு கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தார். மேலும் திஷாதனாவிடம் அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டாம் எனவும் தானே மாஸ்டர்ஸ் படிப்பதற்கான பணத்தை கட்டுவதாகவும் உறுதியளித்தார். இதை கேட்ட திஷாதனாவின் பெற்றோர்கள் கண் கலங்கினர்.