News August 6, 2024
பினராயி விஜயனிடம் ₹1 கோடி வழங்கிய அதிமுக

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, அதிமுக சார்பில் ₹1 கோடி வழங்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், ₹1 கோடிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், 3 கிராமங்கள் மண்ணில் புதைந்ததுடன் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
Similar News
News January 18, 2026
SIR லிஸ்டில் பெயர் இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிக்க..

<<18885691>>வாக்காளர் பட்டியலில்<<>> பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள். பெயர் இல்லாதவங்க, <
News January 18, 2026
இன்று தை அமாவாசை.. இதை மட்டும் பண்ணாதீங்க

☆முன்னோர்களுக்கான இந்நாளில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. அவற்றை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம் ☆வீட்டார் அசைவம் சாப்பிடக்கூடாது ☆தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருள்களை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. இயன்றவற்றை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் ☆வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது ☆இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. SHARE IT.
News January 18, 2026
போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.


