News April 25, 2024
பதவி பறிபோகும் பதற்றத்தில் அதிமுக நிர்வாகிகள்

தேர்தல் முடிந்து 6 நாள்கள் கடந்த நிலையில், அடுத்து என்னாகும்? என்கிற பதற்றம் அதிமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வந்த புகார்களைக் கேட்ட இபிஎஸ் அது குறித்து உண்மையை அறிய முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மூலமாக ரிப்போர்ட் பெற்றாராம். தேர்தல் முடிவு வெளியான பிறகு அக்கட்சியில் சிலரது பதவிகள் பறிபோகும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News January 23, 2026
2வது T20: வெற்றியை தொடருமா இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2-வது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை அருமையாக தொடங்கியது. நியூசிலாந்து அணியும் வலுவான நிலையில் இருப்பதால், இந்த போட்டி இந்தியாவுக்கு கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ODI தொடர் போல் இல்லாமல், இதை நிச்சயம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
News January 23, 2026
இன்று தமிழகம் வருகிறார் PM மோடி

NDA கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க PM மோடி, பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை வருகிறார். கூட்டத்தில், மோடி NDA கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து, பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளார். திமுகவுக்கு எதிராக அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் மோடியின் வருகை, கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
News January 23, 2026
BREAKING: இரவில் அதிமுக கூட்டணியில் இணைந்தார்

NDA கூட்டணியில் அடுத்ததாக தென்னாட்டு மக்கள் கட்சி இணைந்துள்ளது. நேற்றிரவு, தென்னாட்டு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் S.கணேஷ் தேவர் EPS-ஐ நேரில் சந்தித்து, அதிமுகவிற்கான தங்களது ஆதரவை உறுதி செய்தார். இந்நிகழ்வின்போது ராமநாதபுரம் அதிமுக மா.செ முனியசாமி உடனிருந்தார். மோடி தமிழகம் வருவதற்குள் NDA கூட்டணியை வலிமைப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


