News April 15, 2025

அதிமுக நிர்வாகி மரணம்.. இபிஎஸ் நேரில் அஞ்சலி

image

சாலை விபத்தில் உயிரிழந்த சேலம் மாநகர அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இல்லத்திற்குச் சென்று இபிஎஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். 2 நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி செந்தில்குமாரன் உயிரிழந்தார். அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய இபிஎஸ், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சி நிர்வாகியின் அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி இன்றைய பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.

Similar News

News November 14, 2025

Bussiness 360°: IT நிறுவனங்களுக்கு 99 பைசாவில் நிலம்

image

*அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ₹88.68 ஆனது. *இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 47% குறைந்து 75.6 லட்சம் டன்னாக சரிந்தது. *ஆயுள் காப்பீடு வணிகத்தில் மஹிந்திரா கால் பதிக்கிறது. *Accenture, Infosys நிறுவனங்களுக்கு ஆந்திராவில் 99 பைசாவில் நிலம். *111 நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி 10% அதிகரிப்பு. *பாலியெஸ்டர் மூலப்பொருள்களுக்கான தரக்கட்டுப்பாடு நீக்கம்.

News November 14, 2025

சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

அதிமுக, ஓபிஎஸ், டிடிவி கட்சியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஒசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் S.புருசோத்தமரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

News November 14, 2025

ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற ஆணையம்

image

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆணவக்கொலைகளை தடுக்க தேவையான பரிந்துரைகளை வழங்க ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தலைவராகக் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி V.பழனிக்குமார், S.ராமநாதன் (IPS) ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழு, 3 மாதங்களில் பரிந்துரைகளை வழங்கும்.

error: Content is protected !!