News April 15, 2025
அதிமுக நிர்வாகி மரணம்.. இபிஎஸ் நேரில் அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த சேலம் மாநகர அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இல்லத்திற்குச் சென்று இபிஎஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். 2 நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி செந்தில்குமாரன் உயிரிழந்தார். அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய இபிஎஸ், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சி நிர்வாகியின் அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி இன்றைய பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.
Similar News
News October 17, 2025
புதிய கொடி அறிமுகம்.. அண்ணாமலை எடுத்த முடிவு

நெல்லையில் அண்ணாமலைக்கு மன்றம் தொடங்கியதோடு, புதிதாக கொடி அறிமுகம் செய்யப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி X-ல் பதிவிட்டுள்ள அண்ணாமலை, என் மீது வைத்திருக்கும் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், அனைவரும் முதலில் தங்களது குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். உங்க கருத்து?
News October 17, 2025
₹30,000 சம்பளம்.. மத்திய அரசில் 610 காலியிடங்கள்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited- BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 610 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 21- 28. கல்வித்தகுதி: என்ஜினியரிங் டிகிரி. சம்பளம் ₹30,000. இதற்கு வரும் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News October 17, 2025
சற்றுமுன்: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

TN-ல் மது பாட்டிலுக்கு ₹10 அதிகம் வசூலிக்கும் நடைமுறை நவ.30-க்குள் அமலுக்கு வருகிறது. அதாவது, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி ₹10 அதிகம் கொடுத்து மது பாட்டிலை பெற்றுவிட்டு, காலி பாட்டிலை கொடுத்து அதனை திரும்பப் பெற வேண்டும்.