News April 22, 2025
ஏப்.25-ல் அதிமுக மாவட்ட செயலாலர்கள் கூட்டம்!

வரும் 25-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ராயபுரத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4:30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. குறிப்பாக வலுவான தொகுதிகள், பலவீனமான தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம்.
Similar News
News October 31, 2025
வான் ஆதிக்கத்தை பலப்படுத்த புதிய ஏவுகணைகள்

வான்வழி போர் திறன்களை வலுப்படுத்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரஃபேல் போர் விமானங்களை மேலும் பலப்படுத்த, சுமார் 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘Meteor’ ஏவுகணைகளை வாங்க முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தேஜஸ், சுகோய் Su-30 போன்ற இந்திய விமானங்களுக்கு, ‘அஸ்திரா மார்க் 2’ என்ற புதிய ஏவுகணைகளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
News October 31, 2025
PM மோடிக்கு திமுக MP கனிமொழி சவால்!

திமுக அரசு பிஹார் மக்களை அவமதிப்பதாக PM மோடி பேசியது சர்ச்சையான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு TN வரும்போது, PM மோடி இதே கருத்தை சொல்லட்டும் என்று திமுக MP கனிமொழி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு தங்களை எப்படி வைத்துள்ளது என்று தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
News October 31, 2025
BREAKING: மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கம், கார்டு, UPI மூலம் MRP விலையில் மட்டுமே மது பாட்டில்களை விற்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.


