News April 3, 2024
கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவிற்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை இபிஎஸ் நியமித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா எஸ்.பாண்டியன், நிறைகுளத்தான், சாமிநாதன், சிதம்பரம் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், ராஜமாணிக்கம், வடசென்னை தொகுதிக்கு எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News February 9, 2026
NDA கூட்டணியில் தேமுதிக.. முடிவை கூறிய L.முருகன்

தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க திமுகவும், அதிமுகவும் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை கொடுக்கவே இருகட்சிகளும் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக L முருகன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக NDA கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News February 9, 2026
BREAKING: குருப் 2 தேர்வின் புதிய தேதி அறிவிப்பு

மையங்கள் ஒதுக்குவதில் எழுந்த குளறுபடி காரணமாக, நேற்று நடைபெற இருந்த TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மார்ச் 15-ம் தேதி தேர்வு நடைபெறும் என புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. வரும் 28-ம் தேதிக்குள் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் வழக்கமான முறைப்படி அதை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
₹70,000 கோடிக்கு கஞ்சா விற்பனை: ஆதவ் அர்ஜுனா

கஞ்சா விற்பனை செய்யும் நெட்வொர்க்கை இதுவரை போலீசார் கைது செய்யாதது ஏன் என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். 16 வயது பள்ளி மாணவி கஞ்சா விற்பனை செய்யும் நிலை தமிழகத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கஞ்சா விற்பனை மட்டும் ₹60,000 – ₹70,000 கோடிக்கு நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார். மது மற்றும் கஞ்சா விற்பனை அதிகரிப்பதால்தான் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளதாகவும் சாடியுள்ளார்.


