News September 3, 2025
நீதிமன்றங்களில் AI பயன்பாடு?

பள்ளி மாணவர்களும் AI கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் உலகில் தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நீதித்துறையிலும் AI நுழைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட, அமர்வு நீதிமன்றங்களில் வரும் சிறிய வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக AI பயன்பாட்டை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக வழக்குகளை கையாள முடியும். உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 3, 2025
Parenting: குழந்தைக்கு இத சொல்லிக் கொடுத்தீங்களா?

உங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான விஷயங்களை சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. 2-3 வயது குழந்தைகள் இந்த அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.➤மூச்சு பயிற்சிகளை வழங்குங்கள் ➤அவர்களாகவே உடைகளை அணியட்டும் ➤அவர்களுக்கு ஊட்ட வேண்டாம். அவர்களே சாப்பிடட்டும் ➤அவர்கள் போட்ட குப்பையை அவர்களையே சுத்தம் செய்ய சொல்லுங்கள் ➤மன்னிப்பு கேட்கவும், நன்றி சொல்லவும் கற்றுக்கொடுங்கள். SHARE.
News September 3, 2025
இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு.. குவியும் வாழ்த்து

உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது. ‘இட்லி கடை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள அவர், தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்பநிதியின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதேபோல், திமுகவினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News September 3, 2025
யாரும் எதிர்பாராத காம்போ.. புது படம் தொடங்கிருச்சு!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் வழக்கறிஞர்களாக நடிக்கின்றனர். இந்த படம் கோர்ட் ரூம் டிராமாவாக எடுக்கப்படவுள்ளது. இதில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், தீபா, மாலா பார்வதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.