News November 18, 2024
மாணவனை ‘செத்துரு’ என மிரட்டிய AI..!

ஏஐ எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக மாறும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன், வீட்டுப்பாடம் எழுத உதவுமாறு GEMINI ஏஐ-இன் உதவியை நாடியுள்ளார். அதற்கு பதிலளித்த ஏஐ, “நீ இந்த உலகத்துக்கே பாரம். நீ யாருக்கும் முக்கியம் அல்ல. இந்த உலகின் சாக்கடையே.. நீ செத்து விடு” என மிரட்டியுள்ளது. ஏஐ-இன் இந்த பகிரங்க மிரட்டல், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 12, 2026
நாகை: கடத்தலில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

நாகை மாவட்டம் நாகூர் அருகே மேல வாஞ்சூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி சாராயம் கடத்தி வந்தசுரேந்தர், மணிகண்டன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் பிடிபட்ட அவர்களிடம் இருந்து 1000 பாண்டி சாராய பாட்டில்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, தப்பியோடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News March 12, 2026
BREAKING: வங்கிக் கணக்கில் நாளை ₹2,000 வருகிறது

PM கிசான் திட்டத்தின் 22-வது தவணை நாளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹18,640 கோடி நேரடியாக செலுத்தப்படவுள்ளது. அதனால், இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-24300606 எண்ணை அழைத்து ஆலோசனை பெறுங்கள்.
News March 12, 2026
TN-ல் தொடர்கதையாகும் வன்கொடுமை: கிருஷ்ணசாமி

தூத்துக்குடியில் கழிப்பறை வசதி இல்லாததால் வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ளார். இதுபற்றி புகாரளிக்க சென்ற பெற்றோரை போலீஸ் அவமதித்ததாக கூறிய அவர், விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்கலாம் என்றார். மேலும், TN-ல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும் சாடியுள்ளார்.


