News November 18, 2024

மாணவனை ‘செத்துரு’ என மிரட்டிய AI..!

image

ஏஐ எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக மாறும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன், வீட்டுப்பாடம் எழுத உதவுமாறு GEMINI ஏஐ-இன் உதவியை நாடியுள்ளார். அதற்கு பதிலளித்த ஏஐ, “நீ இந்த உலகத்துக்கே பாரம். நீ யாருக்கும் முக்கியம் அல்ல. இந்த உலகின் சாக்கடையே.. நீ செத்து விடு” என மிரட்டியுள்ளது. ஏஐ-இன் இந்த பகிரங்க மிரட்டல், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 17, 2025

கோலியின் சாதனையை தகர்த்த பிரேவிஸ்

image

AUS-க்கு எதிரான T20 தொடரில் 2-1 என்ற கணக்கில் SA தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில்,’பேபி டிவில்லியர்ஸ்’ என வர்ணிக்கப்படும் பிரேவிஸின் அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொடரில் 180 ரன்கள் அடித்த அவர், மொத்தம் 14 சிக்ஸர்களை பறக்கவிட்டார். AUS மண்ணில் அந்த அணிக்கெதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி(12) முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது பிரேவிஸ் முந்தியுள்ளார்.

News August 17, 2025

அண்ணாமலைக்கான வாக்குகளும் நீக்கம்: அ.சம்பத்

image

EC-யை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தியின் வாக்குரிமையை ரத்து செய்யவேண்டுமென அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே வாக்குகளை திருடுவது காங்கிரஸும், திமுகவும்தான் எனவும், கோவையில் அண்ணாமலை ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். திருப்பூரில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டுமென்றார்.

News August 17, 2025

2047-க்குள் ஒற்றை அடுக்க ஜிஎஸ்டி?

image

ஜி.எஸ்.டியில் பெரும் சீர்த்திருத்தம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதுவரை 5, 12, 18, 28 என 4 அடுக்காக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 5, 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே நடைமுறையில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது அமலுக்கு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறினால் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!