News June 25, 2024

கும்பமேளத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த AI தொழில்நுட்பம்

image

பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கும்பமேளாவில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு 3,200 ஹெக்டேர் பரப்பரளவில் கும்பமேளம் நடைபெற்ற நிலையில், தற்போது 4,000 ஹெக்டேர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News March 1, 2026

‘வாய் கிழிய பேசுவதை தவிர திமுக ஒன்றுமே செய்யவில்லை’

image

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

News March 1, 2026

World War 3.. அன்றே கணித்தாரா பாபா வங்கா?

image

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?

News March 1, 2026

காங்கிரஸ் தொகுதிகளில் கைவைக்கும் திமுக?

image

காங்கிரஸுக்கு 2021-ஐ விட தற்போது குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே 41 தொகுதிகளை காங்., கேட்டுவருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இம்முறை காங்கிரஸுக்கு 23 தொகுதிகளே கிடைக்கும் என்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸை திமுக பழிவாங்குகிறதா என கதர் சட்டைகள் கொதிக்கின்றனர்.

error: Content is protected !!