News September 15, 2025
அரசு பள்ளிகளில் வருகிறது AI ரோபோட்டிக்ஸ் Labs

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் ₹15 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி, 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 பாடவேளைகளில் AI, ரோபோட்டிக்ஸ் வகுப்புகள் நடைபெறும்.
Similar News
News September 15, 2025
இன்று முதல் ₹10 லட்சம்.. அமலுக்கு வந்தது

UPI மூலம் பொருள்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான Person-to-Merchant வரம்பு இன்று (செப்.15) முதல் ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச்சந்தை முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம், கடன் தவணை உள்ளிட்டவை ₹2 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், தனிநபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவருக்கு அனுப்பும் லிமிட் ₹1 லட்சமாகவே தொடர்வதாக NCPI தெரிவித்துள்ளது.
News September 15, 2025
பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பல்வேறு மோசடிகள் நடந்துவருவதாக புகார்கள் எழுகிறன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News September 15, 2025
68,000 பூத்களில் ஒன்றாக உறுதிமொழி ஏற்ற திமுகவினர்

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் CM ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். மாநிலத்தின் உரிமை காக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம், நீட் தேர்வு ஒழிப்பு, உரிய கல்வி நிதிக்காக போராடுவோம் என 68,000 பூத்களிலும் திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.